கேரள ஸ்பெஷல் குழாய் புட்டு மற்றும் கடலை கறி ரெசிபி செய்முறை

அரிசி மாவு , தேங்காய் துருவல் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் புட்டு சுவையை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் தரக்கூடும். 
image

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளது. இடங்கள் மட்டுமல்ல உணவுகளிலும் பல வெரைட்டிகள் உள்ளன. இன்றைக்கு கேரளத்து ஸ்பெஷல் ரெசிபியான குழாய் புட்டு மற்றும் அதற்கு.சைட் டிஸ்ஸாக கடலை கறி எப்படி செய்யலாம்? அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

கேரள ஸ்பெஷல் குழாய் புட்டு:

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு - 2 கப்
  • உப்பு - சிறிதளவு
  • தண்ணீர்
  • தேங்காய் துருவல்

செய்முறை:

  • கேரள ஸ்பெஷல் குழாய் புட்டு செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெந்நீர் மற்றும் உப்பு சேர்ந்துக் கொள்ளவும்.
  • பின்னர் 2 கப் மாவை தண்ணீருடன் சேர்ந்துக் கலந்துக் கொள்ள வேண்டும். முன்னதாக தேங்காய் துருவல் எடுத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து குழாய் புட்டு செய்யக்கூடிய பாத்திரத்தில் சிறிதளவு புட்டுக்காக பிசைந்து.வைத்துள்ள மாவை உள்ளே வைக்கவும். இதற்கு மேல் தேங்காய் துருவல், பின்னதாக மாவு என மாற்றி மாற்றி வைக்க வேண்டும்.
  • குழாய் புட்டு செய்யக்கூடிய பாத்திரம் முழுவதுமாக நிரம்பியதும் மூடி வைத்துவிட்டு நீராவியில் வேக வைக்கவும். 5 நிமிடங்களுக்கு வேக வைத்திருந்தால் போதும். சுவையான குழாய் புட்டு ரெசிபி ரெடி.
  • தற்போது குழாய் புட்டுக்காக கடலைக் கறி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம்.

கேரள ஸ்பெஷல் கடலை கறி:

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம்- 1 கப்
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா - சிறிதளவு
  • தக்காளி - 2
  • எண்ணெய் - சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
  • சுண்டல்


செய்முறை:

  • முதலில் கொண்டைக்கடலை அதாவது சுண்டலை உப்பு சேர்ந்து 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துருவலைப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா போன்றவற்றை சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும். பேஸ்ட் பதத்திற்கு வந்ததும் இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய ஊற்றி வெங்காயம், தக்காளி போன்றவற்றை வதக்கவும். சிறிது நேரத்திற்குப் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின்னதாக சுண்டலை சேர்த்து தண்ணீலஞர் ஊற்றி வேக வைக்கவும்.
  • 10 நிமிடத்திற்குப் பின்னதாக சுண்டல் மசாலாவுடன் ஏற்கனவே செய்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து கொதிக்க விட்டால் போதும். சுவையான கடலைக்கறி.ரெடி.

மேலும் படிக்க:ஊட்டச்சத்துள்ள கீரை பாஸ்தா செய்வதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP