mahashivratri fasting food: மகா சிவராத்திரி விரத சமையல் குறிப்புகள்

மகா சிவராத்திரி அன்று செய்யப்படும் ஆரோக்கியமான விரத சமையல் உணவுகளை இப்பதிவில் பார்க்கலாம். 

shivarathiri vrat recipe idea

இந்தியா முழுவதும் சிவபெருமானை வழிபடும் ஒரு பண்டிகை நாளாக மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் ஆசியைப் பெற ஒரு சில பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருப்பார்க்கள். இந்நாளில் விரதம் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உணவுகளை சாப்பிட கூடாது. இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இந்த விரதத்தை கடைபிடிப்பதால் ஏராளமான உடல்நல நன்மைகளையும் பெறலாம்.

மகா சிவராத்திரி அன்று செய்யப்படும் ஆரோக்கியமான விரத ரெசிபிக்களை இப்பதிவில் பார்க்கலாம். விரத உணவுகளை சமைக்கும் பொழுது உப்பு, பூண்டு மற்றும் வெங்காயத்தை பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உப்புக்கு பதிலாக ஒரு சிலர் கருப்பு உப்பை பயன்படுத்துகின்றனர். உப்பை தவிர்க்க முடியாதவர்கள் கருப்பு உப்பை சேர்த்துக்கொள்ளலாம்.

தண்டை

shivarathiri vrat recipe

பிரசித்தி பெற்ற மஹாசிவராத்திரி பண்டிகையின் போது தண்டை செய்வது வழக்கம். இதற்கு பாலுடன் குங்குமப்பூ சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்பு ஒரு மிக்ஸியில் தோலுரித்த பாதாம், முந்திரி, பிஸ்தா, இலவங்கப்பட்டை, சோம்பு, ஏலக்காய், கருப்பு மிளகு, கசகசா மற்றும் பால் சேர்த்து தண்டைக்கான மசாலாவை அரைத்துக்கொள்ளவும். குங்குமப்பூவுடன் சேர்ந்து கொதித்து கொண்டிருக்கும் பாலில் இந்த தண்டை மசாலாவை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். இதை குளிர்வித்து பரிமாறினால் சுவை கூடுதலாக இருக்கும்.

கேரட் சுரைக்காய் ஜூஸ்

shivarathiri vrat recipe

இதை தயாரிக்க ஒரு மிக்ஸியில் சுரைக்காய், கேரட், இஞ்சி, புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து, அனைத்து பொருட்களும் ஒன்று சேரும் வகையில் நன்கு அரைத்து கொள்ளவும். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். இது உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. எனவே இது போன்ற ஆரோக்கியமான ஜூஸை விரத நாட்களில் எடுத்துக்கொள்ளலாம்.

ஜவ்வரிசி கிச்சடி

shivarathiri vrat recipe

இதில் வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாததால் சிவராத்திரி விரதத்தின் போது சாப்பிடுவது சிறந்தது. இதை செய்வதற்க்கு ஜவ்வரிசியை 4-5 மணி நேரம் வரை ஊறவைத்து, பின் தண்ணீரை வடித்து ஜவ்வரிசியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

ஒரு அடிக்கணமாக கடாயில் எண்ணெய் சேர்த்து ஏலக்காய் மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும். பின்பு இதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ் போன்ற காய்கறி கலவையை சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கவும். இதில் ஊறவைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து 10 நிமிடம் மூடிவைத்து வேகவிடவும். சுவையான ஜவ்வரிசி கிச்சடியை வெள்ளரிக்காய் தயிர் பச்சடியுடன் பரிமாறலாம்.

ஜவ்வரிசி தோசை

ஜவ்வரிசியை வைத்து கிச்சடி செய்ய விருப்பம் இல்லாதவர்கள் தோசை செய்து சாப்பிடலாம். இதில் உள்ள கார்போஹைட்ரேட் விரதம் இருப்பவர்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதை செய்வதற்கு அரை கப் ஜவ்வரிசியை தயிரில் 4-5 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். இதனுடன் வேகவைத்த உருளை கிழங்கு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். பிறகு சிறிதளவு சீரகம், மிளகு பொடி மற்றும் பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக் கொள்ளவும்.

இதனை தோசை கல்லில் ஊற்றி, சிறிதளவு எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைக்கவும். மகா சிவராத்திரி போன்ற விரத நாட்களில் இந்த ஜவ்வரிசி தோசைகளை செய்து உண்டு மகிழலாம்.

புளி அவல்

shivarathiri vrat recipe

இது சிவராத்திரி போன்ற விரத நாட்களில் விசேஷமாக தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். இதை செய்வதற்கு ஒரு அகலமான பாத்திரத்தில் புளிக்கரைசல், சாம்பார் பொடி, சிறிதளவு வெல்லம் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துள்ள அவலை 20-30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம், அதிகமாக தண்ணீர் பயன்படுத்தினால் அவல் குழைந்து விடும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள அவல் கலவையை சேர்த்து கிளறவும். அவல் நன்கு ஊறி இருப்பதால் 3-5 நிமிடங்களிலேயே இதை சுலபமாக சமைத்திடலாம். நீங்கள் விரும்பினால் இதில் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சிவராத்திரி ரெசிபி.. பூரண கொழுக்கட்டை !

ஜவ்வரிசி பாயாசம்

shivarathiri vrat recipe

ஜவ்வரிசியை கொண்டு ஏதாவது இனிப்பான உணவை செய்ய விரும்பினால் இந்த பாயாசம் ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இது போன்ற இனிப்பு வகை உணவுகள் உங்கள் விரத நாட்களை முழுமை அடைய செய்யும். பாயாசம் செய்வதற்கு முதலில் ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு இதனை வேகவைத்து கொள்ளலாம். அடுத்ததாக ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால் சேர்த்து அதை சுண்ட காய்ச்சவும். இவ்வாறு செய்வதால் பாயாசத்தின் சுவை பல மடங்கு அதிகரிக்கும்.

பால் பாதியாக வற்றிய உடன் பாயசத்திற்கு தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதனுடன் ஊற வேகவைத்துள்ள ஜவ்வரிசி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்கவிடவும். நீங்கள் விரும்பினால் இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கலக்கலான 3 சிறுதானிய ரெசிபிக்கள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP