உண்மையானப் பெருங்காயம் எது? கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் இங்கே

சமையலுக்குப் பயன்படுத்தும் பெருங்காயத்தில் கலப்படம் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கு இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்திப் பாருங்கள்.
image

இந்திய சமையல் அறையில் பெருங்காயத்தை அதிகளவில் சேர்த்துக் கொள்வார்கள். உணவிற்கு சுவையைக் கொடுப்பதோடு செரிமானம் சீராக இருத்தல், வயிற்று வலி உள்ளிட்ட பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இதன் தேவை ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க போலி பெருங்காயமும் சந்தையில் அதிகளவில் விற்பனையாகத் தொடங்கிவிட்டது. தற்போது சந்தைகளில் விற்பனையாகும் பெரும்பாலான பெருங்காயத்தில் அதிகப்படியான அரிசி மாவு அல்லது கோதுமை மாவு உள்ளிட்ட பல ரசாயானப் பொருட்கள் கலக்கப்படுகிறது. இவற்றை எளிமையான முறையில் எப்படி வீட்டிலேயே கண்டறியலாம்? என்பது குறித்த சிம்பிள் டிப்ஸ்கள் இங்கே.

போலி பெருங்காயத்தைக் கண்றிய உதவும் டிப்ஸ்கள்:

தண்ணீர் பரிசோதனை:

நாம் பயன்படுத்தக்கூடிய பெருங்காயம் போலியானதா? என்பதைக் கண்டறிய முதலில் வீடுகளில் உள்ள கட்டி பெருங்காயத்தைத் தண்ணீரில் போடவும். சிறிது நேரத்தில் பால் நிறமாக மாறினால் அது ஒரிஜினல் பெருங்காயம். அதுவே தண்ணீரில் போட்டவுடன் கொஞ்சம் அழுக்கு நிறமாக மாறுவது மட்டுமின்றி, நீர்த்தும் போனால் நிச்சயம் கலப்பட பெருங்காயமாக இருக்கலாம்.

இதோடு மட்டுமின்றி வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சேர்க்கும் போது அது முழுவதுமாக கரைந்து விட வேண்டும். அப்படி கரைந்துவிட்டால் அது கலப்படம் இல்லாத பெருங்காயமாக இருக்கலாம். அதுவே கரையாத துகள்கள் அல்லது மிச்சத்தைக் கண்டால் அது கலப்படமான பெருங்காயமாக இருக்கும்.

வெப்ப சோதனையைப் பயன்படுத்துதல்:

சமையலுக்குப் பயன்படுத்தவும் பெருங்காயத்தின் தூய தன்மையைச் சரிசெய்ய வேண்டும் என்றால் வெப்ப சோதனையைப் பயன்படுத்த வேண்டும். மெழுகுவர்த்தி அல்லது வெப்பத்தில் சுடும் போது தூய்மையான பெருங்காயம் உடனடியாக தீயில் காட்டியவும் எரியத் தொடங்கும். அதுவே நீங்கள் வைத்திருக்கும் பெருங்காயம் போலியானதாக இருந்தால் தீயில் எளிதில் எரியத் தொடங்காது.

மேலும் படிக்க:ஆட்டுக்கறியை மென்மையாகவும், விரைவாகவும் சமைக்க... இந்த குறிப்புகளைப் பின்பற்றுங்கள்..!

வாசனை மூலம் கண்டறிதல்:

பெருங்காயத்தின் உண்மைத் தன்மையை வாசனையின் வாயிலாக கண்டறிய முடியும். ஆம் பெருங்காயத்திற்கு என தனி நறுமணம் உண்டு என்பதால் கையில் பட்டவுடன் வாசனை அதிகளவில் இருக்கும். இதுவே போலியானதாக இருந்தால் கையில் எவ்வித வாசனையும் இருக்காது. இதன் மூலம் பெருங்காயத்தில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய முடியும்.

பனிக்கட்டி பரிசோதனை:

பெருங்காயத்தை ஐஸ்கட்டியில் வைக்கும் போது உண்மையான பெருங்காயம் மெதுவாக கரைந்து வாசனை எழக்கூடும். அதுவே போலியான பெருங்காயம் என்றால் எவ்வித மாற்றமும் இருக்காது. வாசனையும் வர வாய்ப்பில்லை.

இதுபோன்ற பல்வேறு வழிமுறைகளில் பெருங்காயத்தில் உள்ள கலப்பட தன்மையைக் கண்டறிய முடியும். நீங்கள் எப்போது வாங்கினாலும் விலை மலிவான பெருங்காயம் வாங்குவதைத் தவிர்த்து கொஞ்சம் விலை அதிகம் உள்ள பெருங்காயத்தை வாங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Image credit- pexels

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP