அவியல் என்பது பல காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவை நிறைந்த உணவாகும். இதில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய், தேங்காய், தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் அவியலுக்கு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொடுக்கின்றன. ஒரு சிலர் புளிப்பு சுவைக்காக மாங்காய் அல்லது புளியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பாரம்பரிய முறையின் படி தயிரை பயன்படுத்துவதே சிறந்தது.
ஓணம் சத்யா விருந்து அவியல் இன்றி நிறைவடையாது. காய்கறிகள் முழுமையாக வெந்திருக்க வேண்டும் ஆனால் குழையக்கூடாது. அவியல் நீர்க்க இருக்க கூடாது ஆனால் தேங்காய் மசாலா எல்லாம் காய்கறியுடன் சேர்ந்து பிரியாமல் இருக்க வேண்டும். அட, அவியல் செய்வது இவ்வளவு கஷ்டமா என்று பயந்துவிடாதீர்கள். சிறுசிறு நுணுக்கங்களை முறையாக பின்பற்றினால் மோதும் நீங்களும் பெர்ஃபெக்ட்டான அவியல் செய்யலாம். அவியல் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை இப்போது பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இப்படி ரவா கிச்சடி செஞ்சு பாருங்க, தினமும் செய்ய சொல்லி கேட்பாங்க!
குறிப்பு
அவியல் செய்வதற்கு கேரட், பீன்ஸ், வாழைக்காய், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்ற காய்கறிகளில் உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- காய்கறி கலவை - 2 கப்
- தேங்காய் துருவல் - ½ கப்
- சீரகம் - ½ டீஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- பச்சை மிளகாய் 2-3
- தயிர் - ¼ கப்
- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு -½ டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் நறுக்கிய காய்கறிகளுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் பொடி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
- 7-10 நிமிடங்களில் காய் நன்கு வெந்துவிடும். காய்கறிகளை வேக வைக்க சரியான அளவு தண்ணீரை பயன்படுத்தவும். அதிகமாக சேர்க்க வேண்டாம்.
- ஒரு சில காய்கறிகள் வேக சிறிது நேரம் அதிகமாக தேவைப்படும். இது போன்ற காய்கறிகளை முதலில் சேர்த்து, பின்பு எளிதாக வேகக் கூடிய காய்கறிகளை சிறிது நேரம் கழித்து சேர்த்துக் கொள்ளலாம். இப்படி செய்தால் காய்கள் எல்லாம் குழையாமல் நன்கு வெந்து கிடைக்கும்.
- அடுத்ததாக ஒரு மிக்ஸர் ஜாரில் தேங்காய் துருவல், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுது குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- வெந்த காய்கறியுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும்.
- அடுப்பை அணைத்த பின் அடித்து வைத்துள்ள தயிர் சேர்த்த நன்கு கலக்கவும்.
- அவியலை தாளிப்பதற்கு தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- தேங்காய் எண்ணெயை சூடாக்கி கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளித்து அவியலுடன் சேர்த்து கலக்கவும்.
இந்த அற்புதமான ரெசிபியை செய்வதற்கு ஓணம் வரை காத்திருப்பது சற்று கடினம் தான், வீட்டில் காய்கறிகள் இருந்தால் இன்றே அவியல் செய்து உண்டு மகிழுங்கள்!
இந்த பதிவும் உதவலாம்: இவ்வளவு வெரைட்டியா! ஓணத்திற்கு இப்படி தடபுடலாக விருந்து செய்து அசத்துங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik & google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation