குழந்தைகள் விரும்பிச்சாப்பிடக்கூடிய உணவுப்பட்டியல்களின் வரிசையில் சாக்லேட்டிற்கு அடுத்தப் படியாக இருப்பது ஐஸ்கிரீம். வெயில் காலங்கள் மட்டுமல்ல குளிர்காலத்திலும் கூட ஐஸ்கிரீம் என்றால் போதும், கொஞ்சம் கூட யோசிக்காமல் அதை சாப்பிட வேண்டும் என்று குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அந்தளவிற்கு அதன் சுவை குழந்தைகளைக் கவரக்கூடியதாக உள்ளது. அதிக நேரம் கெடாமல் இருப்பதற்கும் அதன் சுவையை அதிகரிப்பதற்காக பல இராசாயன பொருட்களைக் கொண்டு ஐஸ்கிரீம் தயார் செய்திருப்பார்கள். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்பதை அனைவரும் மறந்து விடுகிறோம்.
ஐஸ்கிரீம்களைச் சாப்பிடுவதால் அனைவருக்கும் உடல் நலம் பாதிக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடுள்ள குழந்தைகள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் குழந்தைகளுக்குப் பிடித்த சுவையில் வீட்டிலேயே சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம். இதோ அதன் ரெசிபி டிப்ஸ் உங்களுக்காக.
சுவையான பாதாம் மற்றும் முந்திரி ஐஸ்கிரீம்
தேவையானப் பொருட்கள்
- பாதாம் - 1 கப்
- முந்திரி - 1 கப்
- மக்கானா (தாமரை விதைகள்
- ) - 1 கப்
- தேங்காய் பால் - 1 கப்
- பேரீட்டை - அரை கப்
- கோகோ பவுடர் - அரை கப்
ஐஸ்கிரீம் செய்முறை:
- ஒரு பெரிய பவுலில் ஒரு கப் பாதாம், ஒரு கப் முந்திரி, ஒரு கப் மக்கானா அதாவது தாமரை விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதனுடன் ஒரு கப் தேங்காய் பால், அரை கப் பேரீட்சம்பழம் மற்றும் அரை கப் கோ கோ பவுடரை கலந்துக் கொள்ள வேண்டும்.
- இதையடுத்து இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒருவேளை உங்களுக்குக் கொஞ்சம் இனிப்பு சுவை அதிகம் வேண்டும் என்றால், சிறிதளவு நாட்டுச்சர்க்கரையைக் கலந்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க:தேங்காய் சட்னியை இப்படி அரைச்சு பாருங்க; நாள் முழுக்க கெடாமல் இருக்கும்
- இறுதியாக இந்த கலவையை ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி 4 மணி நேரத்திற்கு மேல் பிரீட்ஜில் வைத்து எடுத்து வைக்கவும்.
- பின்னர் ஐஸ்கிரீம் மோல்டை வெளியில் எடுத்தால் போதும். சுவையோடு ஆரோக்கியம் நிறைந்த பாதம் மற்றும் முந்திரி கலந்த ஆரோக்கியமான ஐஸ்கிரீம் ரெடி.

அப்புறம் ஏன் இன்னும் வெயிட் பண்றீங்க? இப்பவே உங்களது குழந்தைகள் விரும்பிச்சாப்பிடக்கூடிய ஐஸ்கிரீமை வீட்டிலேயே ரெடி பண்ண ஆரம்பிக்கவும். என்ன தான் வீட்டிலேயே ஐஸ்கிரீம் ரெடி செய்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது பல உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே இதை சாப்பிடுவதால் எப்படியெல்லாம் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும். ஐஸ்கிரீம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்தி விடவும் முடியாது. அப்படி வாங்கிக்கொடுக்கிறீர்கள் என்றால்? காலை நேரத்தில் மட்டும் வாங்கிக் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation