தற்போது பருவமழையின் காரணமாக ஆங்காங்கே சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துவருகிறது. இந்த குளிருக்கு இதமாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ்களைச் சாப்பிட வேணடும் என்று நினைப்போம். பஜ்ஜி,போண்டா, வெங்காய பக்கோடா, முறுக்கு போன்ற எண்ணெய் பலகாரங்ளைச் சாப்பிடும் போது, சில நேரங்களில் நமக்கு அஜீரண கோளாறுகள் ஏற்படும். இனி இதுப்போன்ற கவலை வேண்டாம். உடலுக்கு ஆரோக்கியத்தோடு, சுவையும் உங்களுக்கும் கொடுக்கும் இந்த புதினா கொழுக்கட்டையை உங்களது வீடுகளில் ட்ரை பண்ணிப்பாருங்கள். இதோ அதற்கான ரெசிபி டிப்ஸ் இங்கே..
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 2 கப்
தேங்காய் பால் - ஒன்றரை கப்
உப்பு - சுவைக்கு ஏற்ப
புதினா தழை - அரை கப்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
இஞ்சி - சிறியது
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 1
புதினா கொழுக்கட்டை செய்முறை:
- புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
- அரைத்த விழுதுடன் தேங்காய் பால் ஊற்றி நன்றாகக் கரைத்து விட்டு வடிகட்டிக்கொள்ளவும்.
- பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். சிறிதளவு நுரை கட்டி வந்தவுடன் இதனுடன் அரிசி மாவை சேர்த்து நன்றாகக் கிளறவும். ( நீங்கள் எடுத்து வைத்துள்ள அரிசி மாவு நைஸாக இருக்க வேண்டும்).
- இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கிளற வேண்டும்.
- கைப்பிடிக்கும் அளவிற்கு சூடு வந்தவுடன் இதைச் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிப்பிடித்து இட்லி தட்டில் வைத்து வேக வைத்தால் போதும். சுவையோடு ஆரோக்கியமான புதினா கொழுக்கட்டை ரெடி.
பொதுவாகவே நீராவியில் வேகவைக்கும் உணவுப் பதார்த்தங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இனி நீங்களும் உங்களது குழந்தைகளை ஆரோக்கியத்துடன் வளர்க்க வேண்டும் என்றால் இந்த ரெசிபி உங்களுக்கு உதவியாக இருக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation