
மாலை நேரத்தில் நாம் தேநீர் அல்லது காபி அருந்துகிறோமோ இல்லையோ சூடாக பஜ்ஜி, போண்டா அல்லது இனிப்பு போளி, காளான் என எதாவது சாப்பிட வேண்டும் என நினைப்போம். கடந்த 20 ஆண்டுகளாகத் தான் இனிப்பு போளியை பல கடைகளில் தயாரிக்கின்றனர். அதற்கு முன்பாக கொஞ்சம் பெரிய கடைகளில் மக்மல் பூரி கிடைக்கும். அதைப் பார்க்கும் போதே கட்டாயம் நாக்கில் எச்சில் ஊரும்.
இதைத் தற்போது ஒரு சில கடைகளிலேயே தயாரிக்கின்றனர். தாத்தா காலத்து ஸ்வீட் ஆக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளும் முன்பாக 30 - 40 ஆண்டுகளுக்கு முன்பாக இதன் தயாரிப்பு முறை எப்படி இருந்தது என பார்க்கலாம்.
அன்றைய காலத்தில் தயாரிக்கப்படும் பலகாரங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படாது என்பதால் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மட்டுமே அவை கெடாமல் இருக்கும். இரண்டு நாட்களுக்குள் லட்டு, ஜாமூன், மைசூர் பாக் போன்றவை விற்றுத் தீரவில்லை என்றால் மூன்றாவது நாளில் இவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு உடைத்து நன்றாகக் கலந்து பூரி செய்து அதற்குள் திணித்து விடுவார்கள். அவ்வளவு தான் மக்மல் பூரி. இதற்கு Old sweet in new wrapper எனப் பெயர்.
ஆனால் நாம் பால்கோவா பயன்படுத்தப் போகிறோம். இதற்குப் பாம்பே ரசப் பூரி என மற்றொரு பெயரும் உண்டு. இப்படி பெயர் வைத்தால் எளிதில் விற்றுவிடும் என நம்பியுள்ளனர்.

மேலும் படிங்க ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயிறு தோசை செய்முறை
மேலும் படிங்க பேச்சுலர்களுக்கான ஸ்பெஷல் பன்னீர் புர்ஜி பிரியாணி
இது அதிக கலோரி கொண்டது அதனால் மாதம் ஒரு முறை செய்து சாப்பிடுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com