herzindagi
image

குழந்தைகள் கொழுகொழுன்னு இருக்கணுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்க மறந்திடாதீங்க!

குழந்தைகளை எப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றால் கட்டாம் ஊட்டச்சத்துள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.  
Editorial
Updated:- 2025-09-02, 15:50 IST

குழந்தை பராமரிப்பு என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சவால்கள் நிறைந்தாக இருக்கும். ஏன் உன் குழந்தை இப்படி இருக்கு? சாப்பிட எதுவும் கொடுப்பயா? கொடுக்கமாட்டயா? என்பது போன்ற பல கேள்விகளை உற்றார், உறவினர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். இதெல்லாம் பல நேரங்களில் நமக்கு எரிச்சலான உணர்வை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு அம்மாக்கள் படும் மெனக்கேடுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த நிலையை நீங்களும் அனுபவிக்கிறீர்களா? 6 மாதத்திற்குப் பிறகு உங்களது குழந்தைகளுக்கு என்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்ற குழப்பம் உள்ளதா? இதோ இந்த கட்டுரையைக் கொஞ்சம் படித்துவிட்டு செல்லுங்கள்.

மேலும் படிக்க: இன்றைய காலத்துக் குழந்தைகளை உளவியல் ரீதியாக சமாளிக்கும் வழிமுறைகள்

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுகள்:

  • தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்குப் பிறகு கொஞ்சம் திட உணவுகள் கொடுக்க வேண்டும். எடுத்தவுடனே வழக்கமாக சாப்பிடுவது போன்று சாப்பாடு கொடுப்பது குழந்தைகளின் ஜீரண சக்தியைக் குறைத்துவிடும். எனவே முதலில் சாப்பாட்டை நன்கு கஞ்சி போன்று காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
  • 3 டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசித்துக் கொள்ள வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: வீட்டில் குழந்தைகள் சண்டையிட்டால் அதை தீர்த்து வைக்க பெற்றோர் செய்ய வேண்டியவை

  • அடுத்ததாக இட்லி மற்றும் தோசையைக் கொடுக்கலாம். ஒரு பவுலில் இட்லியுடன் தண்ணீர் சேர்த்து மசித்துக் கொடுக்கவும். ஆரம்பத்தில் முழு இட்லி அல்லது தோசை சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. 4 அல்லது 5 முறை குழந்தைகளுக்கு ஊட்டி விட்டால் போதும். அதுவே வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்தும்.

 

  • குழந்தைகள் மிகவும் ஒல்லியாகவே இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் உடல் தேறவில்லை என்று கவலைக் கொள்ளக்கூடிய அம்மாக்கள், கொஞ்சமாக வாழைப்பழங்களை அவர்களுக்கு ஊட்டி விடலாம். வாழைப்பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எடை அதிகரிப்பதற்கும், வயிற்றில் உள்ள செரிமான அமைப்புகள் சீராக செயல்படவும் உதவுகிறது.
  • பாதாம், வால்நட், பாதாம், பேரீச்சம்பழம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை ஒரு மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும். பின்னர் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை சூடாக்கி இந்த கலவையைச் சேர்த்து நன்கு காய்ச்சிக் குடிக்கலாம்.

மேலும் படிக்க: “செல்போன் தான் வேணும்; இல்லை சாப்பிட மாட்டேன்” - அடம்பிடிக்கும் குழந்தைகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்

  • பாசிப்பருப்பு, அரிசி, சுரைக்காய் போன்றவற்றை குக்கரில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் இதனுடன் சிறிதளவு நெய் மற்றும் தண்ணீர் ஊற்றி பிசைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். முதல் முறையாக நெய் சாதம் கொடுக்கிறீர்கள் என்றால், கொஞ்சமாக கொடுத்து பழகவும். செரிமானம் எந்தளவிற்கு உள்ளது? என அறிந்துக் கொண்ட பின்னதாக அளவை அதிகப்படுத்திக் கொள்ளவும்.
  • அடுத்ததாக அங்கன்வாடியில் கொடுக்கும் சத்துமாவு அல்லது வீட்டில் தயாரிக்கப்படும் சத்துமாவில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து குழந்தைகளுக்குக் காய்ச்சிக் கொடுக்கலாம். சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது.

 Image credit - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com