herzindagi
image

குழந்தைப் பிறந்தவுடன் பணிக்குச் செல்லும் பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இதோ!

ஒரு வயது வரை பணிக்குச் சென்றாலும் கட்டாயம் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும். பணிக்குச் செல்லும் முன்னதாக தாய்ப்பாலை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Editorial
Updated:- 2025-09-13, 23:54 IST

குழந்தை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் ஓர் வரம். அதை முறையாகப் பராமரிப்பது என்பது கட்டாயம் ஒவ்வொரு தாய்மார்களுக்கும் இருக்கும் பொறுப்புள்ள பணி என்பது நிசர்தன உண்மை. அதே நேரம் பணிக்குச் செல்லும் பெண்களாக இருந்தால், குழந்தைப் பிறந்த 9 மாத காலங்களுக்குப் பிறகு பணிக்குச் செல்வதில் பல இக்கட்டான சூழல்களைச் சந்திப்பார்கள். இந்த சூழலில் பல பெண்கள் தங்களது பணியை விடும் சூழலுக்கும் தள்ளப்படுவார்கள். இவற்றை எப்படி சமாளிப்பது? பணிக்குச் சென்றாலும் கைக்குழந்தையும் பணியையும் எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த தகவல்கள் இங்கே.

மேலும் படிக்க: பெண் குழந்தைகளை இப்படி வளர்த்துப்பாருங்கள். நிச்சயம் தைரியமாக இருப்பார்கள்!

பணிக்குச் செல்லும் பெண்களும் குழந்தை பராமரிப்பும்

  • பிறந்த நாள் முதல் 6 மாதம் அல்லது 9 மாத வரை குழந்தைகள் அம்மாவின் அரவணைப்பில் தான் இருக்கும். சட்டென்று அவர்களைப் பிரிந்து 8 மணி நேரம் அலுவலகம் சென்று பணியாற்றுவது என்பது ஒவ்வொரு பெண்களும் சந்திக்கும் இக்கட்டான சூழல். ஆனாலும் இன்றைய பொருளாதார சூழல் பெண்களும் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இப்படி பணிக்குச் செல்லும் பெண்கள் முதலில் மன தைரியத்துடன் இருக்க வேண்டும்.
  • குழந்தைகளை அம்மா அல்லது குழந்தை பராமரிப்பு மையத்தில் விட்டு செல்லக்கூடிய சூழலில் இருந்தால், பணிக்குச் செல்லும் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக இதற்கு தாய்மார்கள் குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தையை விட்டு பணிக்குச் சென்றாலும் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கும் என்ற மனநிலை உங்களுக்கு ஏற்படும்.

  • அடுத்ததாக பணிக்குச் செல்லும் முதல் நாள், தாமதமாக செல்லாதீர்கள். குழந்தை இருக்கிறது என்பதால் என்னால் பணியை சிறப்பாக செய்ய முடியவில்லை என உங்களது மேலதிகாரியிடம் கூறாதீர்கள். இது உங்களின் தன்னம்பிக்கையைக் குறைக்க நேரிடும்.
  • அலுவலகத்தில் சில நேரம் உயர் அதிகாரிகளிடம் திட்டல்கள் வாங்க நேரிடும். இதையெல்லாம் அலுவலகத்திலேயே விட்டு விட வேண்டும். வீட்டிற்கு வரும் போது குழந்தையை எப்படி பராமரிப்பது? என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: உங்களது குழந்தைகளுக்கு சிறந்த அம்மாவாக மாற வேண்டுமா? இதை பாலோ பண்ணுங்க!

ஒரு வயது வரை பணிக்குச் சென்றாலும் கட்டாயம் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க வேண்டும். பணிக்குச் செல்லும் முன்னதாக தாய்ப்பாலை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். குளிர்சாதன பெட்டி இல்லாமல் அறையில் வைக்கிறீர்கள் என்றால் 4 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். அதுவே குளிர்சாதன பெட்டியில் இருந்தால் 8 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். இதுபோன்ற முறைகளில் தாய்ப்பாலை சேமித்து வைக்கும் போது குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்கிறார்கள் என்ற மனநிலை ஏற்படும். இதனால் பணியிடத்தில் மன அழுத்தம் இன்றி பணியாற்ற முடியும்.

Image credit - Freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com