சுதீஷ் சங்கர் இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு நடிப்பில் ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் மாரீசன் படம் வெளியாகியுள்ளது. விவேக் பிரசன்னா, கோவை சரளா, லிவிங்ஸ்டன் இந்த படத்தில் நடித்துள்ளனர். மாமன்னன் படத்திற்கு பிறகு பஹத் பாசில் வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். மாரீசன் படம் எப்படி இருக்கிறது வாருங்கள் பார்ப்போம்.
மறதி நோய் கொண்ட வடிவேலுவிடம் 25 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க பஹத் பாசில் திட்டமிடுகிறார். பஹத் பாசிலின் ஆசையில் பெரிய திருப்பம் காத்திருக்கிறது. பஹத் பாசில் வடிவேலுவை ஏமாற்றினாரா ? என்ன நடந்தது என்பதே மாரீசன்.
திருட சென்ற இடத்தில் வடிவேலுவை பணத்திற்காக பஹத் பாசில் மீட்கிறார். ஏடிஎம்-ல் வடிவேலு பணம் எடுக்கும் போது அவரது கணக்கில் 25 லட்சம் ரூபாய் இருப்பதை கண்டுபிடிக்கிறார். வடிவேலுவிற்கு மறதி நோய் என்பதால் அவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை லாவகமாக கொள்ளையடிக்க பஹத் பாசில் நினைக்கிறார். இருவரும் நீண்ட நெடிய இருசக்கர வாகன பயணத்தை தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் வடிவேலுவை பற்றி மிகப்பெரிய உண்மை பஹத் பாசிலுக்கு தெரிய வருகிறது. யார் வைத்த எலி பொரியில் யார் சிக்கியது ? என முதல் பாதியில் யதார்த்தமாகவும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாகவும் இரண்டரை மணி நேர படமெடுத்துள்ளனர்.
மேலும் படிங்க தலைவன் தலைவி விமர்சனம் : மெகா பட்ஜெட்டில் கலகலப்பான கணவன் மனைவி சீரியல்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்றால் நல்ல படம் பார்த்த அனுபவத்தோடு வெளியே வரலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com