ஜோஃபின் டி.சக்கோ இயக்கத்தில் ஜனவரி 9ஆம் தேதி வெளிவந்த படம் ரேகாசித்ரம். ஆசிப் அலி, அணஸ்வரா ராஜன், மனோஜ் ஜெயன், ஹரிஸ்ரீ அசோகன், சித்திக், இந்திரன்ஸ், ஜெகதீஷ், பாமா அருண் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 2 மணி நேரம் ஓடும் ரேகாசித்ரம் மலையாள க்ரைம் த்ரில்லர் படங்களை ரசிக்கும் நபர்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இந்த பதிவில் ரேகாசித்ரம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
30 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த கொலையில் வெறும் எலும்புக்கூடு வைத்துக்கொண்டு ஹீரோ குற்றவாளிகளை தேடுகிறார். பல்வேறு சவால்கள் கொண்ட இந்த வழக்கை அவர் எப்படி வெற்றிகரமாக முடிக்கிறார் என்பதே கதை.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் அதிகாரி ஆசிப் அலி மீண்டும் பணியில் சேரும் போது தற்கொலை சம்பவம் நடக்கிறது. விசாரிக்க சென்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் தான் ஒரு கொலைகாரர் என சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு கொலை செய்யப்பட்ட பெண் இருக்கும் இடத்திலேயே இறந்து விடுகிறார். பெண்ணின் உடலை எடுத்த பிறகு விசாரணை தீவிரம் அடைகிறது. 30 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் கடும் சிக்கல் நிலவுகிறது. இதையெல்லாம் மீறி ஹீரோ அசிப் அலி குற்றவாளிகளை கண்டுபிடிப்பதே ரேகாசித்ரம் படம்.
மேலும் படிங்க டிடி ரிட்டர்ன்ஸ் 2 அடுத்த லெவல் : மீண்டும் சந்தானம் - ஆர்யா காம்போ
ரேகாசித்ரம் ரேட்டிங் - 3.75 / 5
படத்தில் உண்மையான குற்றவாளியே மம்மூட்டி தான். படம் பார்ப்பவர்களுக்கு இது புரியம். தேவ தூதர் பாடி பாடலை இனி மலையாள சினிமா ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com