மார்கழி மாதம் மச்சும் குளிரும் என்பதற்கேற்ப தற்போது குளிர் தரையில் கால் வைக்கமுடியாத அளவிற்கு வாட்டி வதைக்கிறது. காலை 8 மணி ஆனாலும் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத அளவிற்கு பாடாய்ப்படுத்துகிறது. இதோடு வழக்கமான பணிகளைக் கூட நம்மால் செய்ய முடியாத அளவிற்கு இருப்பதோடு உடல் நலத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது.
ஆம் குளிருக்கு இதமாக நொறுக்குத் தீனிகளை அதிகளவில் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் நலப்பிரச்சனைகளும் ஏற்படுகிறது. மேலும் வழக்கமாக செல்லக்கூடிய ஜிம்மிற்கு அல்லது ஜூம்பா வகுப்புகளுக்குக் கூட செல்ல முடியாமல் அவதிப்படுவோம். இதோ இந்த குளிர்காலத்தில் உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து விபரங்கள் இங்கே..
மேலும் படிங்க:இலவங்கப்பட்டை டீயில் உள்ள அற்புத குணங்கள் இது தான்!
குளிர்காலத்திற்கு ஏற்ற ஹெல்த்தி டிப்ஸ்
சமச்சீர் உணவுடன் ஆரோக்கிமான வாழ்க்கை:
- குளிர்காலம் என்றாலே நம்முடனே சோம்பேறித்தனமும் உடன் சேர்ந்துவிடும். மேலும் போர்வையை இழுத்திப்போர்த்திக்கொண்டு வீட்டில் அம்மாக்கள் செய்யும் பலகாரங்கள் முதல் கடைகளில் விற்கப்படும் சூடான நொறுக்கத்தீனிகளைச் சாப்பிடுவோம். இது சில நேரங்களில் நமக்கு உடல் ரீதியாக பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
- மேலும் குளிர்ந்த காற்றினால் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுப்போன்ற நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட நீங்கள் ஊட்டச்சத்துள்ள காய்கறிகள்,பழங்கள், நட்ஸ் போன்றவற்றை உங்களது வழக்கமான உணவு முறைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
எண்ணெய் பலகாரங்களைத் தவிர்த்தல்:
- உணவில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளைச் சேர்த்துக் கொள்ளும் போது, உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும். இதோடு உடல் எடையும் கணிசமாக உயரக்கூடும். இது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் தேவையில்லாத எண்ணெய் பலகாரங்களைத் தவிர்ப்பது நல்லது.
- எடையைக் கட்டுப்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களிலிருந்து ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளை ஒரு சிறந்த உணவு தேவைப்படுகிறது. மைதாவிற்குப் பதிலாக கோதுமை ரொட்டியை சாப்பிடுங்கள், இதன் மூலம் நீங்கள் குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுதல்:
- குளிர்காலத்தில் வழக்கமாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைக் கூட நம்மால் முறையாக செய்ய முடியாது. மேலும் குளிருக்கு இதமாக சாப்பிடும் நொறுக்குத் தீனிகளால் உடல் எடை அதிகரிக்கும். இந்நேரத்தில் நீங்கள் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- முறையான செரிமானத்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் படியாது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நீரிழிவ மற்றும் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

வீட்டிலேயே உடற்பயிற்சி செய்தல்:
- குளிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே சோம்பேறியாக இருக்கும். இதனால் ஜிம்மிற்குச் சென்று வழக்கமான உடற்பயிற்சிகளைக் கூட உங்களால் செய்ய முடியாது. இந்த சமயத்தில் உங்களது வீட்டையே உடற்பயிற்சி நிலையாக நீங்கள் மாற்றிக்கொள்ளவும்.
- குறிப்பாக உங்களது வீட்டு படிக்கட்டுகளில் நடப்பது, 8 போடுவது, யோகா,தியானம் போன்ற உடற்செயல்பாடுகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். உங்களைக் குளிர்காலத்திலும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்
மேலும் படிங்க:பெண்களை அதிகம் பாதிக்கும் மறதி நோய்; இனி உஷாரா இருந்துக்கோங்க!
இதுப்போன்ற ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகள் உங்களை குளிர்காலத்தில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation