herzindagi
image

மழைக்காலத்தில் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்

மழைக்காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான உணவு பொருட்களை உட்கொள்வது முதல் ஆவி பிடித்தல், சூடான பானம் அருந்துதல் போன்ற செயல்முறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
Editorial
Updated:- 2025-11-10, 01:53 IST

தமிழகம் முழுவதும் காலையில் ஓரளவிற்கு வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை நேரங்களில் லேசான சாரல் மழையும், குளிரும் வாட்டி வதைக்கிறது. பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி போன்ற வைரஸ் தொற்று பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. இது மட்டுமின்றி கடந்த மாதங்களில் வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. என்ன தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டாலும் ஒரு வார காலத்திற்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்க அன்றாட வாழ்க்கை முறையில் சில நடைமுறைகளைப்
பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில இங்கே.

மேலும் படிக்க: வெங்காயம் சாப்பிட்ட பின்னர் இருக்கும் வாய் துர்நாற்றத்தை போக்கும் சிம்பிள் டிப்ஸ்

மழைக்காலத்தில் உடல் ஆரோக்கியம்:

  • மழைக்காலங்களில் வைரஸ் தொற்றின் பாதிப்பு வெகுவாக மக்களைப் பாதிக்கும் என்பதால் எப்போதும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் எப்போதும் வெளியில் சென்று வீடு திரும்பினாலும் கை, கால்களை நன்கு சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். கிருமி நாசினி இல்லையென்றால் சோப்புகளைப் பயன்படுத்தினாலும் கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
  • மழைக்காலங்களில் அனைவரையும் அதிகம் பாதிப்பது சளி, இருமல் பிரச்சனைகள் தான். இவற்றைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகளைக் கொண்ட தேன் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு தேன் கொடுக்கும் போது சளி பாதிப்பு ஏற்படாமல் இருப்பதோடு செரிமான அமைப்பையும் சீராக்கும்.

மேலும் படிக்க: உங்களை அறியாமல் மன அழுத்தத்தில் இருக்கிறீர்களா? இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்

 

 

  • மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க விரும்பும் மக்கள் மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரைக் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் தொற்று பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

  • குளிர் மற்றும் மழைக்காலங்களில் வீசிங் பிரச்சனை அதாவது மூச்சுத்திணறல் பிரச்சனை எதுவும் உள்ளவர்கள் எப்போதும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும். இதோடு வாரத்திற்கு ஒருமுறையாவது நொச்சி, வேப்பிலை, ஆடாதொடா, தும்பை, எலுமிச்சை இலை போன்ற மூலிகை இலைகளை நன்கு வேக வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.
  • கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களாக இருந்தால், எப்போதும் குழந்தைகளுக்கு குளிருக்கு இதமான ஆடைகளை அணிய வேண்டும். ஸ்வெட்டர், கையுறை, கால் உறை போன்றவற்றை போட்டு எப்போதும் வெப்பமான சூழலில் வைத்திருக்க வேண்டும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com