Triphala suranam benefits: திரிபலா சூரணம் என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றின் கலவையாகும். இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய இடத்தை வகித்து வருகிறது. இவற்றின் தனித்துவமான குணங்கள் ஒருங்கிணைந்து, திரிபலா சூரணத்தை ஒரு சக்திவாய்ந்த மருந்தாக மாற்றுகின்றன. இதன் முக்கிய ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Badam pisin benefits: எலும்புகளை பலப்படுத்துவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை; பாதாம் பிசின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
திரிபலா சூரணத்தின் மிகப்பெரிய நன்மை அதன் செரிமான செயல்முறையை மேம்படுத்தும் திறன் ஆகும். இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது, குடல் இயக்கங்களை சீராக்குகிறது மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இந்த மூன்று மூலிகைகளின் கலவை, செரிமான ஆற்றலை தூண்டி, உணவில் இருந்து ஊட்டச்சத்துகள் உறிந்து கொள்ளப்படுவதை மேம்படுத்துகிறது. இதனால், வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் குறைகின்றன.
நவீன வாழ்க்கை முறையில் நாம் சந்திக்கும் சுற்றுச்சூழல் நச்சுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள் உடலின் நச்சுத்தன்மையை அதிகரிக்கின்றன. திரிபலா சூரணம் ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்பட்டு, உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை புதுப்பித்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது.
திரிபலா சூரணம் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்தது. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி அதன் ஆன்டிஆக்ஸிடன்ட் செயல்பாட்டை வலுப்படுத்துகிறது, இதனால் செல்கள் வயதாவதில் இருந்து பாதுகாக்கப்படுகின்றன. இது உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம்.
மேலும் படிக்க: உடல் எடை குறைப்பில் முட்டையின் பங்கு; இப்படி சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
ஒரு வலுவான நோய் எதிர்ப்பு மண்டலம் நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது. திரிபலா சூரணம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, உடலின் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது நோய்வாய்ப்படும் வாய்ப்பை குறைத்து, உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
திரிபலா சூரணத்தின் புத்துணர்ச்சி அளிக்கும் பண்புகள் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தை சுத்திகரித்து, சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகின்றன. மேலும், திரிபலா சூரணத்தின் ஊட்டமளிக்கும் தன்மைகள் முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உதிர்தல் மற்றும் இளநரை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றன.
அந்த வகையில் சரியான மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதனை எடுத்துக் கொள்வது பல்வேறு நன்மைகளை வழங்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com