கோடைக்காலத்தில் உடலுக்கு போதுமாக தண்ணீர் உட்கொள்ளல் பற்றி நாம் அனைவருக்கும் கவலை இருக்கும். நாள் முழுவதும் நீரேற்றமாக இருக்க வெளியே செல்லும் போது தண்ணீர் பாட்டில்களை கையில் எடுத்துச்செல்கிறோம். அதுமட்டுமின்றி கோடையில் பழச்சாறுகள், சுவையான பானங்களை தொடர்ந்து பருகுகிறோம். நமது உடலில் நீர் உட்கொள்ளலை அதிகரிப்பதால் நமது ஆற்றலைப் பராமரிக்கவும் வெப்பத்தைத் தாங்கவும் உதவுகிறது. நம் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்ப்பதால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
சமீபகாலமாக நீரேற்றத்திற்காக நிறைய பேர் தண்ணீரில் உப்பு சேர்த்து வருகின்றனர். இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள, விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர் - ஃபாஸ்ட்&அப் நேஹால் சதீஷ் படேலிடம் பேசினோம்.
தண்ணீரில் சிட்டிகை உப்பு சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்கிறது
உடலில் வியர்க்கும்போது, சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் இரண்டையும் இழக்கிறோம். எலக்ட்ரோலைட்டுகள் நம் உடலில் திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துவதற்கும் நமது தசைகள் சரியாக செயல்படுவதற்கும் முக்கியம். எனவே நீண்ட நேரம் உடல் செயல்பாடுகளில் ஈடுபடும்போது அல்லது அதிகமாக வியர்க்கும் போது நீர் மற்றும் எலக்ட்ரோலைட்டை உடலில் நிரப்ப வேண்டும்.
எலக்ட்ரோலைட் நிறைந்த பானங்களான மற்றும் தேங்காய் தண்ணீர் குடிப்பது கோடை காலத்தில் நன்மை பயக்கும். இருப்பினும் லேபிள்களைச் சரிபார்த்து, ஐந்து அத்தியாவசிய எலக்ட்ரோலைட்டுகள் அல்லது குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு எலக்ட்ரோலைட்டுகளை இருக்கும் பானங்களைத் தேர்ந்தெடுத்து குடிப்பது நல்லது. நமது தண்ணீர் அல்லது விளையாட்டு பானத்தில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்ப்பது வியர்வையின் மூலம் இழந்த சோடியத்தை பெற உதவுகிறது. சரியான அளவு சோடியத்தை உட்கொள்வது தசைப்பிடிப்பு மற்றும் பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது.
தடகள செயல்திறனை அதிகரிக்கிறது
தண்ணீர் அல்லது பிற பானங்களில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்ப்பது எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் போதுமான சோடியம் அளவுகளுடன் உடலுக்கு எரிபொருளை அளிக்கிறது. இவை இரண்டும் உகந்த தடகள செயல்திறனுக்கு அவசியம், ஏனெனில் அவை நீரேற்றம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்விற்கும் உதவுகிறது.
மேலும் படிக்க: உடல் எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிப்பதான் அளவு மாறுபடும்... தெரியுமா?
தண்ணீரில் உப்பு சேர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை
- இதை அதிக உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் அல்லது அதிகமாக வியர்வை எடுப்பவர்கள் பின்பற்ற வேண்டும்.
- தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடாத ஒரு சராசரி நபர் உணவில் அதிக உப்பைச் சேர்ப்பது தீங்கு விளைவிக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும்.
- நீங்கள் ஒரு சுகாதார சிகிச்சைக்கு உட்பட்டிருந்தால் இதை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகவும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்சிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation