கோடை காலத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்க பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். இந்த காய்கறிகளில் ஒன்று முருங்கைக்காய். இது மருத்துவ குணங்கள் நிறைந்தது காய்கறிகளில் ஒன்றாகும் இவற்றை மிகுந்த மகிழ்ச்சியுடன் சாப்பிட்டலாம். முருங்கைக்காயை விரும்பாத நபர்கள் அவற்றை தண்ணீர் போல் செய்து குடிக்கலாம். இந்த முருகைக்காய் தண்ணீரில் பல வழிகளில் ஆரோக்கிய பலன் பெறலாம். கோடையில் முருங்கை நீரை குடிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
முருங்கை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- முருங்கை நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளதால் நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது. நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு முருகைக்காய் உதவுகிறது. கோடையில் பருவகால நோய்த்தொற்றுகளின் ஆபத்து அதிகரிக்கும் போது குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
- முருங்கை நீர் குடிப்பது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் சி உள்ளதால் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது மற்றும் கோடையில் ஏற்படும் தோல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
- இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் நீங்கள் முருங்கை நீர் குடித்தால் இரும்பு அளவை மேம்படுத்துவதன் மூலம் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
- கோடையில் நீரேற்றத்தை அதிகரிக்க முருங்கை நீரையும் அருந்தலாம். இது நீர் உள்ளடக்கம் மற்றும் உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் தருகிறது. கோடையில் முருங்கை நீர் குடிப்பதால் உடல் வெப்பநிலை சீராக இருப்பதுடன், வெப்ப பக்கவாதத்தில் இருந்தும் பாதுகாக்கிறது.
- குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் முருங்கைக்காய் தண்ணீரை குடிப்பதால் செரிமானமும் மேம்படும். இதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஐசோதியோசயனேட்டுகள் குளுக்கோஸை விரைவாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
முருங்கைக்காய் தண்ணீர் செய்முறை
- முருங்கைக்காய் எடுத்து துண்டுகளாக நருக்கி தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் அதில் இருக்கும் சதைகளை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு போட்டுப் பொறிக்க வேண்டும்.
- அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- முருங்கைக்காயில் தண்ணீர் சேர்த்து வதக்கிய கலவையுடன் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
- அதன்பின் அதில் தேவையான மிளகு, உப்பு சேர்த்தால், முருங்கைக்காய் தண்ணீர் ரெடி.
மேலும் படிக்க: கோடைக்காலத்தில் பழைய சோறு கஞ்சி குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்சிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Image Credit: Google & Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation