சின்னத்திரையின் டாப் ஜோடி என்றால் அது ஆல்யா- சஞ்சீவ் தான். ராஜா ராணி முதல் பாகத்தில் சேர்ந்து நடித்த இருவரும் அந்த தொடர் முடியும் தருவாயில் திருமணம் செய்து கொண்டனர். சஞ்சீவ் தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்தார். ஆனால் ஆல்யா திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையில் இருந்து பிரேக் எடுத்தார். பின்பு முதல் குழந்தை பிறந்தது. ஐலா என பெயர் வைத்தார். குழந்தை பிறந்து 9 மாதங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார். ராஜா ராணி 2வது பாகத்தில் லீட் ரோலில் நடித்தார்,
அதே சமயம் சஞ்சீவ் சன் டிவி கயல் சீரியலில் நடிக்க தொடங்கினார். டிஆர்பியில் கலக்கும் இந்த சீரியலில் பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. இதற்கிடையில் ஆல்யா பின்பு மீண்டும் கர்ப்பமானார். இதனால் சீரியலில் இருந்து விலகினார். 2வது குழந்தை அர்ஷ் பிறக்க 6 மாதங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்தார். சன் டிவியில் புதியதாக தொடங்கப்பட்ட இனியா சீரியலில் ஆல்யாவின் 2வது ரீ என்ட்ரி அமைந்தது.
இப்போது கணவன், மனைவி இருவரும் ஒரே சேனலில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் 2தினங்களுக்கு முன்பு ஆல்யா தனது 28வது பிறந்த நாளை கொண்டாடினார். கேக் வெட்டி, கிஃப்ட் கொடுத்து இரவு 12 மணிக்கு சஞ்சீவ் வழக்கம் போல் சர்ப்ரைஸ் கொடுத்தார். இது இல்லாமல் தனது மனைவி நடிக்கும் இனியா தொடரின் மொத்த நடிகர், நடிகைகளுக்கும் பிரியாணி ட்ரீட் கொடுத்து அசத்தி இருக்கிறார் சஞ்சீவ்.
இந்த பதிவும் உதவலாம்:பட்டு புடவையில் பட்டையை கிளப்பும் தமிழ் நடிகைகள்
ஆல்யா, சஞ்சீவ் இருவரும் தங்களது கையாலே அனைவருக்கும் பிரியாணியை பரிமாறி தங்களது அன்பை பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவை ஆல்யா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு சஞ்சீவுக்கு தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation