மார்கழி மாதத்தில் எதை செய்யணும் ? செய்யக் கூடாது என தெரிஞ்சுகோங்க

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய & செய்யக்கூடாத விஷயங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மார்கழி தொடங்கிய டிசம்பர் 16ல் இருந்து கடைசி நாளான ஜனவரி 13வரை நாம் எதை தொடர்ந்து செய்ய வேண்டும் என விஷயங்களும் பகிரப்பட்டுள்ளது.
image

சில மாதங்களில் சில விஷயங்களை செய்யக்கூடாது என பெரியர்கள் நமக்கு சொல்லி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக மார்கழி மாதத்தை எந்த வித நற்காரியங்களும் செய்யக் கூடாத மாதமாக பார்க்கின்றனர். ஆனால் மாதங்களில் உயர்ந்த மாதம் என்றால் அது மார்கழி மாதம். கிருஷ்ண பரமாத்மா நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார். பரமாத்மா மார்கழியை இப்படி குறிப்பிடுகிறார் என்றால் கட்டாயம் சிறப்பம்சங்கள் உண்டு. இந்த மாதத்தில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ? என்பதை பார்க்கலாம்.

margazhi month aandal

மார்கழி மாதத்தில் செய்யக் கூடாதவை

மார்க்கழியில் பொதுவாக விதை விதைக்க கூடாது என்று சொல்லுவார்கள். இது விதை வளருவதற்கான காலம் அல்ல. மார்கழியில் விதை சரியான உயிர்த்தன்மை பெறாது என்ற காரணத்தால் மார்கழியில் விதைக்காதீர்கள் என கூறினர். இதை திருமணத்துடன் பொருத்தி மார்கழியில் திருமணங்கள் செய்யக்கூடாது என்றனர்.

மார்கழியில் அதிகாலைக்கு பிறகு தூங்க கூடாது. மார்கழியில் பிரம்ம முகூர்த்த நேரத்தை தாண்டியே தூங்க கூடாது. 4 - 4.30 மணிக்குள் குளிக்க வேண்டிய மாதம் மார்கழி. அந்த நேரத்தில் நாம் மூச்சாக எடுக்கும் ஆக்ஸிஜன் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும். அதிகாலையிலேயே குளித்துவிடுவது நல்லது.

மார்கழி மாதத்தில் இரவில் கோலம் போடக்கூடாது. மார்கழியில் காலை நேரத்தில் தான் கோலம் போட வேண்டும். இப்போதெல்லாம் இரவிலேயே கோலம் போட்டு சுற்றி செங்கல் அடுக்கி பாதுகாக்கின்றனர். காலையில் தான் வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். கோலம் என்பது வீட்டை அழகுப்படுத்துவது மட்டுமல்ல. ஒரு விதமான தர்ம செயல் எனக் குறிப்பிடலாம்.

மேலும் படிங்ககார்த்திகை தீப திருநாளில் விளக்கேற்றும் நேரம்; செய்ய வேண்டிய வழிபாடு

மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை

  • வீட்டு வாசலில் இரண்டு அகல் விளக்கு(நல்லெண்ணெய்) ஏற்றுங்கள். உங்களுடைய தேவையை கடவுளிடம் வேண்டி வழிபாடு செய்யவும்.
  • பஜனை குழுவுடன் சென்று இறைவன் நாமத்தை சொல்லுங்கள்.
  • ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றை படிக்கவும். 30 நாட்கள் இதை செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
  • மார்கழி பக்திக்கு உரிய மாதம், பணிவாக இறைவனின் அருளை பெறும் மாதம். வைகுண்ட ஏகாதசி என்ற அற்புதமான திருநாளும், ஆருத்ரா தரிசனம் என்ற மற்றொரு அற்புதமான திருநாளும் வருகின்ற மாதமான இந்த மார்கழியை புத்துணர்வு அளிக்கும் மாதமாகக் கருதுங்கள்.


இதுபோன்ற ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP