உகாதி என்பது தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டம் ஆகும். தெலுங்கர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள இது நல்ல நாளாக கருதப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் உகாதி கொண்டாட்டத்தின் போது பச்சடி செய்வது மிகவும் பொதுவானது. இது துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு என அறுசுவைகளையும் கொண்டது. உகாதி அன்று காலையில் குளித்து முடித்த பிறகு பச்சடி செய்து சாமிக்கு படையலிட்டு கும்பிடுவார்கள். இதை சாப்பிட்ட பிறகே பிற உணவுகளை சாப்பிடுவது வழக்கம். நம் நாட்டில் காலம் காலமாக அறுசுவை உணவுகளை சாப்பிட்டு வந்தோம். ஆறு சுவையும் நமது ஆரோக்கியத்தில் பங்களிப்பதாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உடல்நலக் குறைபாடு வருவதற்கு துவர்ப்பு, கசப்பு ஒதுக்கியதே காரணம். காரம், இனிப்பு கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோம். மற்ற சுவைகளை போல துவர்ப்பு, கசப்பு உள்ள உணவுகளை உட்கொள்வதில்லை. அனைத்தையும் சம அளவில் சாப்பிடும் போது மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் படிங்க கோடை வெயிலுக்கு இதமாக மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டா சுவைக்கலாம் வாங்க!
ஹெர் ஜிந்தகி வாசகர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் உகாதி வாழ்த்துகள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com