herzindagi
Kalkandu Pongal

Kalkandu Pongal : வீட்டிலேயே கோயில் கற்கண்டு பொங்கல் சமைக்கலாம்

கற்கண்டு பொங்கல் என்பது அரிசி, சிறு பருப்பு மற்றும் கற்கண்டு ஆகிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் கோயில் பிரசாதமாகும். 
Editorial
Updated:- 2024-01-08, 12:05 IST

பொங்கல் பண்டிகையன்று விதவிதமான பொங்கல் வகைகளை நாம் வீட்டிலேயே ருசிக்க முடியும். எப்போதுமே வீடு, கடைகளில் சாப்பிடும் பொங்கல்களில் இருந்து கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் கற்கண்டு பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். அதிக நெய் பயன்படுத்தி இருக்கிறார்கள் என நமக்குத் தோன்றும். வீட்டில் இதை தயாரிப்பது சற்று கடினமாக இருக்கும். ஆனால் இங்கு பகிரப்பட்டுள்ள செய்முறை உங்களுக்கு உதவும்.

சர்க்கரை பொங்கலுக்கு இணையான சுவை கொண்ட பொங்கல் என்றால் கற்கண்டு பொங்கலை குறிப்பிடலாம். கற்கண்டை பொடியாக்கி சிறு பருப்பு மற்றும் அரிசியை வைத்து இந்தப் பொங்கல் செய்யப்படுகிறது. இது சாமிக்குப் படைக்கப்படும் பிரசாதங்களில் முதன்மையானதாகும். தீபாவளி, பொங்கல் , நவராத்திரி கொண்டாட்டங்களின்போது இந்தப் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. 

Kalkandu

கற்கண்டு பொங்கல் செய்யத் தேவையானவை

  • அரிசி 
  • பால் 
  • கற்கண்டு 
  • சிறு பருப்பு 
  • நெய் 
  • ஏலக்காய் தூள்
  • பச்சை கற்பூரம் 
  • சர்க்கரை
  • முந்திரி பருப்பு 
  • உலர் திராட்சை

மேலும் படிங்க Sakkarai Pongal Recipe : பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் ரெசிபி!

செய்முறை 

  • அரிசி மற்றும் சிறு பருப்பை ( பாசிப் பருப்பு ) தண்ணீரில் நன்கு கழுவவும்
  • அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறச் செய்யுங்கள், சிறு பருப்பை கொஞ்சம் நேரம் ஊற வைத்தால் போதுமானது 
  • 200 கிராம் அரிசிக்கு 100 கிராம் சிறு பருப்பு என்பதே சரியான அளவீடு
  • இதற்கு 200 கிராம் அளவு கொண்ட கப் பயன்படுத்தவும்
  • ஒரு பெரிய குக்கரில் இவை இரண்டையும் ஒன்றாகப் போட்டு ஒன்றரை கப் பால் ஊற்றவும்
  • பால் பயன்படுத்தும் அளவிற்கு தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். அதாவது ஒன்றரை கப் தண்ணீர்
  • பெரிய குக்கரில் கற்கண்டு பொங்கல் சமைப்பது நல்லது. ஏனென்றால் சமைக்கும்போது பால் பொங்கி வெளியே வரக்கூடாது
  • இதையடுத்து மூன்று ஸ்பூன் நெய் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கி விடுங்கள்
  • நான்கு விசில் அடிக்கும் வரை காத்திருக்கவும். அதிக தீ வைத்து இரண்டு விசில் அடிக்கும் படியும் குறைந்த தீ வைத்து இரண்டு விசில் அடிக்கும் படியும் பார்த்துக் கொள்ளுங்கள் 
  • நான்கு விசில் அடித்த பிறகு குக்கரை பத்து நிமிடங்களுக்குத் தொந்தரவு செய்யாதீர்கள்  
  • ஒரு கப் அளவிற்கு கற்கண்டு எடுத்து அதை மிக்ஸியில் போட்டு அரைத்து விடுங்கள்
  • தற்போது குக்கரில் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்க்கவும் 
  • அடுத்ததாக மிக்ஸியில் அரைத்த கற்கண்டு பவுடரை அப்படியே சேர்க்கவும்
  • அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கிண்டவும். தேவைப்பட்டால் 50 கிராம் சர்க்கரை சேர்க்கவும்
  • இதனிடையே மற்றொரு பேனில் 100 மில்லி நெய் ஊற்றி அது சூடான பிறகு தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை சேர்க்கவும் 
  • முந்திரி பருப்பு பொன்னிறத்திற்கு மாறி இருக்க வேண்டும். உலர் திராட்சை பலூன் போல உப்பி இருப்பது அவசியம்
  • இறுதியாக ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும் 

மேலும் படிங்க Ven Pongal Recipe : மிக ருசியான வெண் பொங்கல்! ஈஸி ரெசிபி

  • அடுப்பை ஆஃப் செய்துவிட்டு 15 நிமிடங்களுக்கு கழித்து சாப்பிடவும் கோயிலில் தயாரிக்கும் கற்கண்டு பொங்கலை விட இந்தப் பொங்கல் சுவையானதாக அமையும்
Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com