நம்முடைய பிள்ளைகளின் காலை உணவு எப்போதும் பிரெட், பட்டர், ஜாம் இன்றி நிறைவடைவது இல்லை. நான் சொல்வது சரி தானே. நாமும் வேலைச்சுமை காரணமாக, பாட்டிலை ஃபிரிட்ஜில் வைத்து அவர்களுக்கு கொடுக்க செய்வோம். நம்முடைய பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பிரெட்டையும், ஜாமையும் வாங்குவது எளிதான காரியமும் அல்ல. அதனை அவர்கள் எப்போது தின்று தீர்ப்பார்கள் என்பதனை நம்மால் ஊகிக்க முடியாது. அதோடு, ஒரு பாட்டில் ஜாம் விலை, தோராயமாக நூறு ரூபாயை தாண்டுகிறது. எனவே, கம்மியான விலை கொடுத்து ஒரு சில பொருட்களை வாங்கி, இதனை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். அட ஆமாம். இன்று, சுவையான சத்தான ஆப்பிள் ஜாமை வீட்டிலேயே நாம் எப்படி தயாரிப்பது என்பதை தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
செய்வது எப்படி?
- ஆப்பிள் ஜாம் செய்வதற்கு, ஆப்பிளை முதலில் நறுக்கிக்கொள்ள வேண்டும். பிறகு அவற்றின் விதைகளை நீக்கிக்கொள்ளவும். ஏனெனில், விதையில்லா ஜாம் தானே சுவையாக இருக்கும். விதைகளை நீக்காமல் தான் ஜாம் செய்துவிட முடியுமா என்ன?
- ஆப்பிளின் விதைகளை நீக்கிய பிறகு, ஒரு பாத்திரம் நிறைய நீர் ஊற்றி, ஒரு நாள் முழுவதும் ஆப்பிளை ஊறவைத்து விடவும். இவ்வாறு செய்வதால் மறுநாள் சீக்கிரம் வெந்துவிடும். அதோடு, கூடுதல் சுவையை இது தரக்கூடியது.

- அடுத்த நாள், அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து அவை மிருதுவாகும் வரை கொதிக்க விடவும். அவை கொதித்ததும், நீரை வடிகட்டிவிட்டு மிக்ஸர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
- பிறகு கடாயில் சர்க்கரை போடவும். சிறிதுநேரம் கழித்து, கடாயில் அரைத்த ஆப்பிளை கொட்டி, 5 முதல் 6 நிமிடங்கள் வைத்திருக்கவும். ஆறு நிமிடங்கள் கழித்து, எலுமிச்சை சாறு, ஏலக்காய் பொடி, இலவங்கப்பட்டை பொடி சேர்த்து கிண்டிக்கொள்ளவும்.

- ஐந்து நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஒரு பாட்டிலில் நிரப்பி, ஃபிரிட்ஜில் வைக்கவும்.
- இதனை காலை உணவிற்கு நாம் கொடுத்து வரலாம்.
Image Credit: shutterstock
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation