ஒவ்வொரு வீட்டிலும் அம்மாக்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால் வீட்டில் உள்ள ஒரு துரும்பும் கூட சந்தோஷத்தை வெளிப்படுத்தாது. அந்தளவிற்கு வீடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளார்கள். அதிலும் முதல் குழந்தையைப் பெற்றெடுத்த அம்மாக்கள் சந்தோஷமாக இல்லையென்றால் குழந்தைகளைப் பராமரிப்பது முதல் அன்றாட பணிகளை செய்வது வரை அனைத்திற்கும் பிரச்சனையோடு பெரும் சவாலானதாக அமையும்.
குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது அம்மாக்களுக்கு முழு நேர வேலை என்றாலும், சுய பாதுகாப்பிற்கென்று சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் இல்லையென்றால் குழந்தைகளையும் முறையாக வளர்க்க முடியாது. இதோ புதிய அம்மாக்களுக்கான சுய பாதுகாப்பு குறிப்புகள் என்னென்ன? என்பது குறித்து நாமும் தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.
ஓய்வு அவசியம்:
புதிதாக பிறந்த குழந்தைகளில் பெரும்பாலோனார் இரவு நேரத்தில் அதிகம் தூங்க மாட்டார்கள். இதனால் அம்மாக்களும் முழித்திருக்க வேண்டியிருக்கும். இது மனதளவில் உங்களை எரிச்சல் அடைய செய்யும். எனவே முடிந்தவரை அம்மாக்கள் ஓய்வெடுக்க வேண்டும். குழந்தைகள் தூங்கும் போது அம்மாக்களும் ஓய்வு எடுக்க வேண்டும். ஒருவேளை அந்த நேரத்தில் நீங்கள் தூக்கம் வரவில்லையென்றால் புத்தகம் படிக்கலாம். பிடித்த விஷயங்களில் நேரத்தை செலவிடுவது உங்களை மனதளவில் அமைதியாக வைத்திருக்கும். உங்களுக்கு தூக்கம் அதிமாக இருக்கும் நேரத்தில் உங்களது கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள சொல்லவும்.
மேலும் படிக்க:பெண்களே உங்களது வாழ்க்கையில் இந்த சேமிப்புப் பழக்கங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்!
சுவாச பயிற்சி:
பிறந்த குழந்தைகளைத் தூக்குவதற்குக் கூட அம்மாக்கள் பதட்டம் அடைவார்கள். தலை நிற்காத குழந்தையை தூக்கும் போது எதுவும் பிரச்சனையாகிவிடுமோ? என்ற அச்சம் புதிய அம்மாக்களுக்கு கட்டாயம் இருக்கும். மேலும் பல நாள்கள் இரவு தூங்காமல் இருப்பதும் தாய்மார்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைப்பதற்கு சுவாச பயிற்சியை மேற்கொள்ளவும்.
நீரேற்றத்துடன் இருத்தல்:
குழந்தைகளைப் பராமரிக்கும் தாய்மார்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு மறந்து விடுவார்கள். ஆரோக்கியமாகவும், ஆற்றலுடன் இருக்க வேண்டும் என்றால், அதிகளவு தண்ணீர் குடிப்பது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டராவது தண்ணீர் குடிக்க வேண்டும்.
சத்தான உணவுகளை உட்கொள்ளல்:
கர்ப்ப காலத்தில் எந்த உணவுகளையும் முறையாக சாப்பிட முடியாது. அதே சமயம் குழந்தைப்பிறந்த பிறகு என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற ஆசை ஏற்படும். இது உங்களது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் பழங்கள், சிறு தானிய உணவுகள் போன்றவற்றையும் சேர்ப்பது நல்லது. தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் சோர்வை இது நீக்கும்.
பொழுதுபோக்கிற்காக நேரத்தை ஒதுக்குதல்:
ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது, குழந்தை தொடர்பான பணிகளில் இருந்து விடுபடவும், மேலும் நிறைவாக உணரவும் உதவும். பின்னல், ஓவியம் அல்லது இசை வாசிப்பது எதுவாக இருந்தாலும், நீங்கள் ரசிக்கும் ஏதாவது ஒன்றைச் செய்ய நேரம் ஒதுக்குங்கள். தியானம் அல்லது யோகா போன்ற மைண்ட்ஃபுல்னெஸ் நுட்பங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க:தேர்வெழுதும் குழந்தையின் நினைவாற்றலை அதிகரிப்பதற்கான வழிகள்
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு புதிய தாயாக உங்களிடமே கருணை காட்டுவது முக்கியம். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்கிறீர்கள் என்பதையும், உங்களுக்குத் தேவைப்படும்போது உதவி கேட்பது சரியே என்பதையும் நினைவில் கொண்டு எவ்வித தயக்கமும் இன்றி செயல்படவும். இதுபோன்ற நடைமுறைகளைத் தினமும் கடைப்பிடித்தாலே புதிய அம்மாக்கள் மகிழ்ச்சியோடு இருப்பதோடு அவர்களது குழந்தைகளையும் மகிழ்ச்சியுடன் வளர்ப்பார்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation