மாதவிடாய் காலத்தில் இந்த 5 விஷயங்களை செய்யக்கூடாது; ஏன் தெரியுமா?

பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களில் செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
image

பெண்கள் பலருக்கும் மாதவிடாய் காலம் என்பது ஒரு அசௌகரியமான விஷயமாக இருக்கலாம். ஒரு சிலர் அதிக வயிற்று வலி, உடல் சோர்வு, கை கால் முட்டி வலி போன்ற விஷயங்களை கடந்து வருகிறார்கள். இந்த மாதவிடாய் காலத்தில் ஒரு மென்மையான மற்றும் வசதியான காலத்தை உறுதிப்படுத்த இந்த நேரத்தில் பெண்கள் தங்களை கவனித்துக்கொள்வது முக்கியம். அந்த வரிசையில் பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களில் செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

சுகாதாரத்தை புறக்கணிக்க கூடாது:


நோய்த்தொற்றுகள் மற்றும் அசௌகரியங்களைத் தடுக்க மாதவிடாய் காலத்தில் நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது அவசியம். சானிட்டரி பேட்கள் அல்லதுடாம்பூன்களை தவறாமல் அடிக்கடி மாற்றுவது, பிறப்புறுப்பு பகுதியை லேசான சோப்பால் (pH அளவு கம்மியான சோப்பு) கழுவுவது மற்றும் சுத்தமான உள்ளாடைகளை அணிவது ஆகியவை மாதவிடாய் காலத்தில் உங்களை சுத்தமாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.

istockphoto-1392709564-612x612

உணவைத் தவிர்க்க கூடாது:


பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் பசி அல்லது பசியின்மை மாற்றங்களை அனுபவிக்கலாம். ஆனால் உணவை தவிர்க்காமல் இருப்பது முக்கியம். வழக்கமான, சீரான உணவை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், மனநிலை மாற்றங்களைக் குறைக்கவும், மாதவிடாய் சுழற்சியை ஆதரிக்க தேவையான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்கவும் உதவுகிறது.

ஓய்வு முக்கியம்:


மாதவிடாய் நாட்களில் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பெண்கள் சோர்வடைவார்கள், எனவே உங்கள் உடலுக்கு ஒய்வு கொடுப்பது முக்கியம். உங்களை நீங்களே மிகவும் கடினமான வேளைகளில் தள்ள வேண்டாம். இந்த நேரத்தில் அதிகப்படியான உழைப்பு, அதிகப்படியான உடற்பயிற்சி அல்லது அதிக வேலைகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். ஓய்வெடுப்பது, சுய கவனிப்புக்கு நேரம் ஒதுக்குவது மூலம் மாதவிடாய் அறிகுறிகளை உங்களால் நிர்வகிக்க முடியும்.

Raleigh-OB_Painful-Period-e1579164716105 (1)

இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள்:


குறிப்பாக இடுப்பு மற்றும் வயிற்றைச் சுற்றி இறுக்கமான ஆடைகள் அணியும் போது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தலாம் மற்றும் மாதவிடாய் காலத்தில் பிடிப்புகள் மற்றும் அசௌகரியத்தை அதிகரிக்கும். இந்த மாதவிடாய் வலியைப் போக்குவதற்கும் உடல் தளர்வுகளை ஊக்குவிப்பதற்கும் இயக்கம் மற்றும் காற்றோட்டத்தை அனுமதிக்கும் தளர்வான, வசதியான ஆடைகளை அணிவது நல்லது.

சுய கவனிப்பை புறக்கணிக்காதீர்கள்:


மாதவிடாய் பல பெண்களுக்கு ஒரு சவாலான நேரமாக இருக்கலாம், எனவே சுய கவனிப்பு மற்றும் மன நலனுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். புத்தகம் வாசிப்பது, குளிப்பது, நினைவாற்றல் பயிற்சி செய்வது அல்லது அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுவது போன்ற மகிழ்ச்சியையும் நிதானத்தையும் தரும் செயல்களில் ஈடுபடுங்கள். சுய கவனிப்பு நடைமுறைகள் மன அழுத்தத்தைத் தணிக்கவும், மாதவிடாய் காலத்தில் ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

அந்த வரிசையில் மாதவிடாய் காலத்தில் தன்னை கவனித்துக்கொள்வது அறிகுறிகளை நிர்வகிப்பதற்கும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் அவசியம். மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யக்கூடாத இந்த ஐந்து விஷயங்களைத் தவிர்ப்பதன் மூலம், மாதத்தின் இந்த நேரத்தை நீங்கள் மிகவும் வசதியாக மாற்றலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP