சித்தா அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் வீர தீர சூரன். துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, ப்ருத்வி, மலையாள நடிகர் சூரஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஓடிடி உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியில் நீதிமன்ற தடை விதிக்கப்பட்டதால் வெளியான முதல் நாளில் வீர தீர சூரன் படத்தின் வசூலில் தொய்வு ஏற்பட்டது. எனினும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக படத்தை லாபகரமாக மாற்றி வருகிறது.
வீர தீர சூரன் கதைச் சுருக்கம்
முதலாளி விஸ்வாசம் காரணமாக கொலையாளி வேடம் எடுக்கும் விக்ரம் ஒரு கட்டத்தில் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக விபரீதமான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். கொலையை திட்டமிட்டபடி முடித்தாரா அல்லது குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே வீர தீர சூரன்.
வீர தீர சூரன் விமர்சனம்
மதுரை மாவட்டத்தின் கிராமப் பகுதியில் மளிகை கடை நடத்தும் விக்ரமிடம் முதலாளி ப்ருத்வி தன்னையும், மகன் சூரஜ்ஜையும் காப்பாற்றும்படி உதவி கேட்கிறார். விக்ரமும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு காவல் அதிகாரி எஸ்.ஜே.சூர்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். விக்ரமை முழுமையாக நம்பாத சூரஜ் அவருடைய குடும்பத்தை ஆட்கள் வைத்து பின்தொடர்கிறார். இதையடுத்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். விக்ரம் யாரை கொலை செய்து யாரை காப்பாற்றினார் ? குடும்பத்தை காப்பாற்றினாரா என்பதே 5-6 மணி நேரத்திற்குள் நடக்கும் வீர தீர சூரன்.
வீர தீர சூரன் பாஸிட்டிவ்ஸ்
- விக்ரம் நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார். காளி கதாபாத்திரம் ஆரம்பம் முதல் இறுதிவரை மிரட்டல்.
- ப்ருத்வி, சூரஜ், எஸ்.ஜே.சூர்யா மூவரும் கச்சிதமான தேர்வு. எஸ்.ஜே.சூர்யா வழக்கம் போல மிரட்டியிருக்கிறார்.
- பிளேஷ் பேக் தவிர்த்து 95 விழுக்காடு காட்சிகள் இரவிலேயே எடுக்கப்பட்டு இருந்தாலும் திரையில் எங்கும் இருட்டடிக்காமல் காட்சிப்படுத்தியுள்ளனர்.
- விக்ரம் - துஷாரா இடையிலான ரொமாண்டிக் காட்சிகளும் நன்றாக இருந்தது.
- பின்னணி இசை, சண்டை காட்சிகள் மிரட்டல். அந்த ஒரு சம்பவம் காட்சியை காப்பாற்றியது ஜீ.வி.பிரகாஷின் இசை.
- மதுரை வீரன் பாடலை பயன்படுத்தியது சரியா தவறா என தெரியவில்லை. எனினும் விக்ரம் அடித்து நொறுக்க வேண்டும் என்ற எண்ணத்தை இயக்குநர் அருண்குமார் கொடுத்து விடுவதால் அக்காட்சி ஏற்புடையதே.
மேலும் படிங்கOfficer on duty : மலையாள சினிமாவின் மற்றொரு வேட்டையாடு விளையாடு; சேட்டன்ஸ் ஸ்பெஷல்
வீர தீர சூரன் நெகட்டிவ்ஸ்
- விக்ரம் ஏன் ப்ருத்விக்கு விஸ்வாசமாக இருக்கிறார் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கலாம். பிளாஷ் பேக் காட்சி திருப்தியளிக்கவில்லை.
- காவல் அதிகாரியும் - ரெளடி கும்பலும் சரி சமமாக அமர்ந்து சமாதானம் பேசுவது லாஜிக் ஓட்டை.
- வீர வசனம் பேசும் ரெளடி கும்பல் சாமி படத்தின் பெருமாள் பிச்சை கதாபாத்திரம் போல் ஓடி ஒழிந்து கொள்கின்றனர். அப்புறம் ஏன் இந்த வெட்டி வீராப்பு எனக் கேட்க தோன்றுகிறது.
ரேட்டிங் - 3.5 / 5
பல வேஷம் போட்டு நடிப்பது, உடல் எடையை ஏற்றுவது இறக்குவது போன்ற வேலைகளை செய்யாமல் விக்ரம் தொடர்ந்து இதுபோன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation