ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சாக்கோ போன் நடித்து வெளிவந்த படம் ஆபிஸர் ஆன் டூட்டி. பிப்ரவரி 20ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பிரியாமணி, ஜெகதீஷ், வைஷக் சங்கர் ஆபிஸர் ஆன் டூட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மற்றொரு க்ரைம் த்ரில்லர் படம் இந்த ஆபிஸர் ஆன் டூட்டி. வாருங்கள் இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
பள்ளி, கல்லூரி பெண்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்கும் கும்பலை தேடிப் பிடிக்கும் கதையே ஆபிஸர் ஆன் டூட்டி. இது ஒரு பழிவாங்கும் கதையும் கூட.
பணிநீக்கம் செய்யப்பட்ட குஞ்சாக்கோ போபன் மீண்டும் பணிக்கு சேரும் போது நகை மோசடி தொடர்பான வழக்கை விசாரிக்கிறார். துரிதமாகும் விசாரணைக்கு இடையே அடுத்தடுத்த கொலைகள் நடக்கின்றன. குஞ்சாக்கோ போபன் குற்றவாளிகளின் பின்னணியை கண்டறியும் போது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன. பழிவாங்கும் நோக்கத்தில் போதை கும்பல் குற்றவாளிகள் கொலை செய்கின்றனர் என கண்டுபிடிக்கிறார் குஞ்சாக்கோ போபன். இதில் தனது குடும்பமும் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறியும் அவர் போதை பொருள் கும்பலை கண்டுபிடித்து பகையை தீர்த்து கொண்டாரா இல்லையா என்பதே ஆபிஸர் ஆன் டூட்டி
ரேட்டிங் - 4.5 / 5
ஆபிஸர் ஆன் டூட்டி கேரளாவில் நடந்த உண்மை கதை என்றும் கூறப்படுகிறது. போதைக் கலாச்சாரம் நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் கேடு. இது போன்ற படங்களை வரவேற்பது சமூகத்தின் கடமையாகும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com