herzindagi
image

வீட்டு சமையல் அறையில் எறும்புகள் அட்டகாசம் செய்கிறதா? கட்டுப்படுத்த இந்த எளிய வழிமுறைகள் போதும்!

வீட்டில் என்ன பொருட்கள் வைத்தாலும் அதை எறும்புகள் மொய்க்கின்றனவா? எவ்வித வேதிப்பொருட்கள் இல்லாமல் எறும்புகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ உங்களுக்கான எளிய வழிமுறைகள் இங்கே.
Editorial
Updated:- 2025-11-20, 23:37 IST

நமது வீட்டில் மளிகைப் பொருட்கள் வைக்கும் இடங்கள் முதல் நொறுக்குத் தீனிகள் வைக்கும் இடங்கள் மற்றும் சமையல் அறையில் அதிகம் தொல்லைக் குடுப்பது எறும்புகள். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அதன் வேகம் அதிகமாகவே இருக்கும். ஒரு பொருளைக்கூட விட்டு வைக்காது. அத்துணையையும் கொரித்து தின்றுவிடும். இதோடு மட்டுமல்ல தெரியாமல் கை மற்றும் கால் பட்டாலே கடித்துவிடும். இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக எறும்பு பொடி போட்டாலும் அந்த இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் எறும்புகள் வர ஆரம்பித்துவிடும். மாறி மாறி எறும்புகள் வரக்கூடிய இடங்களில் போட்டு எறும்புகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் குழந்தைகள் இருக்கும் இடங்களில் எறும்பு பொடி மற்றும் சாக்ஸ்பீஸ் போடும் போது, அதில் உள்ள விஷத்தன்மை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் வீட்டிலே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி எறும்புகளைக் கட்டுப்படுத்தலாம்.

எறும்புகளைக் கட்டுப்டுத்தும் வழிமுறைகள்:

  • எறும்புகள் செய்யும் அட்டகாசத்தைத் தவிர்க்க வேண்டும் என்றால், எப்போதும் சமையல் அறையை சுத்தமாக துடைத்து வைக்கவும். வீட்டில் இனிப்புப் பலகாரங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் இருந்தால் அதை காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து பாதுகாக்கவும்.
  • அதிக இனிப்புள்ள பொருட்களை தேடி வரும் எறும்புகளை விரட்ட சூடான தண்ணீரைப் பயன்படுத்தலாம். எறும்புகள் இருக்கும் இடத்தில் சூடான தண்ணீரை ஊற்றவும். சூடான வெப்பம் உடனே எறும்புளைக் கொன்றுவிடும்.
  • அடுத்ததாக எறும்புகள் அதிகம் உள்ள இடங்களில் மஞ்சள் பொடியை தூவி விடவும். இதன் நறுமணம் எறும்புகளை மயக்கம் அடைய செய்துவிடும்.

மேலும் படிக்க : குறைந்த  பட்ஜெட்டில் வீட்டை அலங்கரிப்பதற்கான சில யோசனைகள்!

  • எறும்புகளை அகற்ற சோப்பு தண்ணீரைப் பயன்படுத்தலாம். சோப்பு கலந்த தண்ணீரை எறும்பு அதிகம் உள்ள இடங்களில் ஊற்றிவிடவும். இதன் நறுமணத்தை எறும்புகளால் தாங்க முடியாது என்பதால் அந்த இடத்தை விட்டு சென்றுவிடும்.
  • பிரியாணி இலை மற்றும் கிராம்பு போன்றவற்றையும் எறும்புகளை விரட்ட பயன்படுத்தலாம். அரிசி மற்றும் மளிகை சாமான் உள்ள இடங்களில் பிரியாணி இலை மற்றும் கிராம்பை வைத்துவிடும். இதன் வாசனையில் எறும்புகள் அப்பகுதிக்குள் வரவே வாய்ப்பில்லை.
  • கதவு மற்றும் ஜன்னல் பகுதிகளில் இடைவெளி இருந்தாலும் எறும்புகள் சாரை சாரையாய் செல்லக்கூடும். எனவே இதுபோன்று இருந்தால் அதை அடைத்துவிடவும்.
  • எறும்புகளை அகற்ற வேண்டும் என்றால் மிளகு பொடியைப் பயன்படுத்தவும். இதன் காரத்தன்மை எறும்புகளுக்குப் பிடிக்காது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com