வயிற்று போக்கு சமயத்தில் அதிகப்படியான நீர் சத்து உடலில் இருந்து வெளியேறிவிடும். இதனால் வாய் வறண்டு போவது , சோர்வு, வாந்தி, மயக்கம் ஆகியவை தொடங்க ஆரம்பித்து விடும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்றால் உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள அதிகமாக தண்ணீர் மற்றும் திரவ ஆகாரங்கள் பருக வேண்டும். உடலில் தண்ணீர் சத்தை தக்க வைக்க இது மட்டுமே எளிய, சிறந்த வழி ஆகும். இதை தவிர, நீங்கள் விரும்பினால், உப்பு மற்றும் ஜீனி சேர்த்து ஒரு பானம் செய்து பருகலாம். 1/2 ஸ்பூன் உப்பு மற்றும் 6 ஸ்பூன் ஜீனியை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து வைத்த இந்த நீரை அவ்வப்போது குடித்து வரவும். இந்த தண்ணீரில் உப்பு மற்றும் ஜீனி சேர்ப்பதால் நம் இரைப்பை இந்த கரைசலை எளிதில் உறிஞ்சி விடுகிறது.முக்கியமாக வயிற்று போக்கு ஏற்படும் நேரங்களில் தேநீர், காபி அல்லது குளிர் பானங்கள் உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்
உணவு சரியான முறையில் இருக்க வேண்டும்
அடிக்கடி ஏற்படும் வயிற்று போக்கை தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் உணவு முறையை சரியான படி பின்பற்ற வேண்டும். இதற்கு நீங்கள் குறைந்த நார்ச்சத்து உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதில் ஸ்டார்ச் அளவு அதிகமாக இருக்க வேண்டும். உங்கள் வயிற்றை நிரப்பி, உங்களுக்கு பசி ஏற்படாமல் தடுக்கும். பெரும்பாலும் மக்கள் வயிற்று போக்கு ஏற்பட்டால் உணவு உண்பதை அறவே தவிர்த்து விடுவார்கள். இத்தகைய தவறை ஒரு போதும் செய்யாதீர்கள். இது மலச்சிக்கலை உருவாக்கி விடும். இதன் வழியாக குமட்டல் ஏற்படும். எனவே நன்றாக எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உண்பது நல்லது. கஞ்சி, சூப் ஆகியவை இதில் அடங்கும்.
இதுவும் உதவலாம்: எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ப்ரோபயாடிக்ஸ் சேர்க்கவும்
சில வகை உணவு மற்றும் தயிரில் உயிருடன் இருக்கும் பாக்டீரியா தான் ப்ரோபயாடிக்ஸ் எனப்படுகிறது. இந்த நுண்கிருமிகள் நம் செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது மற்றும் தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது. இந்த பாக்டீரியாக்கள் நமது குடல் மற்றும் இரைப்பைக்கு மிகவும் நல்லது செய்கிறது. ப்ரோபயாடிக்ஸ் நம் இரைப்பையை தேவையில்லாத கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கிறது. ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவி செய்கிறது. குடலில் இந்த பாக்டீரியாக்கள் தங்கி விடுவதால், வயிற்று போக்கு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
இந்த உணவுகளை உண்ண வேண்டாம்
வயிற்று போக்கு நேரத்தில் இது போன்ற சில உணவுகளை உண்ண வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு, எண்ணெய் உணவு அல்லது காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். முட்டை கோஸ், பீன்ஸ், முளைகட்டிய பயறு வகைகள், பிரகோலி, பால், பட்டாணி, சோளம் ஆகிய உணவுகளை உண்ண கூடாது. வயிற்று போக்கு நேரத்தில் ஆரோக்யமான மற்றும் எளிமையான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்.
ஆரோக்யம் நிறைந்த டீ குடிக்கலாம்
சீமை சாமந்தி டீ, கிரீன் டீ, எலுமிச்சை டீ ஆகியவை பருக, வயிற்று போக்கு அறிகுறிகள் குறைந்து விடும். சாமந்தி டீ வயிற்று போக்கு பிரச்சனை உண்டாவதை தடுக்கிறது. இந்த டீக்களில்ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி வைரஸ் குணங்கள் உள்ளன. எனவே இது வயிற்று போக்கை உருவாக்கும் கிருமிகளை துரத்துகிறது. மேலும் எலுமிச்சை புல் டீ குடிக்க வயிற்று போக்கால் அவதிப்படுவோர்க்கு நிவாரணம் கிடைக்கும். ஏனென்றால் எலுமிச்சையில் ஆன்டி ஆக்சிடென்ட் பொருட்கள் உள்ளது மற்றும் சில வேதி பொருட்களின் தன்மைகள் இதில் உள்ளதால் இது வயிற்று போக்கு ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கிறது.
இதுவும் உதவலாம்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் பழச்சாறுகள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation