
கொரோனா பேரிடருக்கு பிறகு வீட்டிலே இருந்தே செய்யும் கலாச்சாரம் பெருகி விட்டது. நிறுவனங்களும் நிர்வாக செலவினை குறைக்கும் பொருட்டு பெரும்பாலான பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்கிறது. முன்பை விட தற்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அதிகமானதால் பெரியளவில் ஒரு பிரச்சினை உருவெடுத்து வருகிறது. அலுவலத்தில் வேலை செய்பவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்க வாய்ப்புண்டு.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைபார்க்கும் நபர்களுக்கு அலுவலக நோய்க்குறி இருப்பதாக சொல்லப்படுகிறது. கழுத்து வலி, முதுகு வலி, கை வலி, கழுத்தில் இருந்து கை முழுவதும் வலி பரவல், கை மற்றும் கால் மரத்து போவது, சோர்வாக உணர்வது, இடுப்பு பகுதியில் வலி என இவை அனைத்தும் ஒரு நபருக்கு இயல்பாக ஏற்படும் பிரச்சினைகள் தான். ஆனால் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் மேற்கண்ட பிரச்சினைகள் வந்தால் அதை அலுவலக நோய்க்குறி என்று சொல்கிறோம்.

புதிய வேலை முறையினால் நவீன கால நோய் அலுவலக நோய்க்குறி உருவெடுத்துள்ளது. இதை பற்றி நாம் பயப்பட்ட வேண்டிய அவசியம் இல்லை. உட்கார்ந்து வேலை பார்க்கும் 80 விழுக்காடு நபர்களுக்கு இது பிரச்சினையாக இருக்கிறது. பத்து மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து வேலை பார்த்தால் கண்டிப்பாக இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். முதுகில் நரம்பு தொடர்பான பிரச்சினைகள் வந்தால் அது வேறு காரணங்களால் இருக்கலாம்.
மேலும் படிங்க உலகில் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கொடூர வைரஸ்கள்
அலுவலக நோய்க்குறி பிரச்சினையை தீர்ப்பதற்காக நாம் வேலையை விட்டுவிட முடியாது. ஆனால் சில விஷயங்களை செய்தால் 50 விழுக்காடு பிரச்சினைகளைத் தீர்க்கலாம்.
மேலும் படிங்க “அனோஸ்மியா” வாசனை உணர்வு திறன் இழப்புக்கான மருத்துவ சிகிச்சை
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com