இரவு நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் ஹோட்டலுக்கு சென்று வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு அடுத்த நாள் காலையில் எழும் போது வயிறு உப்பியது போல் உணர்வோம். வயிறு நிறைய சாப்பிட்டதால் தொப்பை போட்டு விட்டது என நினைக்க கூடாது. இது வயிறு உப்புசம் பிரச்சினையாகும். வயிறு உப்புசம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. தூக்கமின்மை, மன அழுத்தம், அதிக உப்பு உட்கொள்ளல், தண்ணீர் கம்மியாக குடிப்பது போன்ற காரணங்கள் வயிறு உப்புசம் பிரச்சனைக்கு பொதுவானவை.
நீங்கள் நினைக்கலாம் தண்ணீர் குறைவாக குடித்தால் வயிறு எப்படி ஊதும் என்று ? நமது உடலில் 60 விழுக்காடுக்கும் அதிகமாக தண்ணீர் உள்ளது. நாம் தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் போது உடலில் இருந்து சிறுநீர் வெளியேற்றம் மற்றும் வியர்வை மூலம் இழக்கும் தண்ணீர் அளவு சீராக இருக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காத போது உடலில் தண்ணீர் அளவுகள் மாறும். அதாவது ஹார்மோன்கள் உடலில் தண்ணீர் இல்லை என தண்ணீரை சேமிக்க தொடங்கும். வயிறு உப்புசத்திற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். அதேபோல மாவுச்சத்து அதிகமுள்ள உணவு மற்றும் அதிகளவு உப்பு உடலில் இருந்தால் தண்ணீர் தங்கிவிடும்.
பொட்டாசியம் குறைபாடும் உடலில் நீர் எடையை அதிகரித்து வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும். எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் அதிக நீர் தங்காது. மேலும் உடலில் சோடியம் அளவு சீராக இருந்தால் உப்புசம் பிரச்சினை வராது. உணவகங்களில் வாங்கி சாப்பிடும் கடைகளில் சுவைக்காக உப்பு அதிகமாக பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக பிரபல நிறுவனத்தின் சிப்ஸ் பாக்கெட்டில் உப்பு சுவையே அதிகமாக இருக்கிறது. இதை குழந்தைகளும் சாப்பிடுகின்றனர். சராசரியாக நாள் ஒரு நாளுக்கு ஆறு கிராம் உப்பு மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதற்கு மேல் சாப்பிடக் கூடாது என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.
பாஸ்ட் புட்ஸ், ஜங்க் புட்ஸ் எனும் குப்பை உணவில் அதிகளவு உப்பு இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். வயிறு உப்புசத்தின் போது நமக்கு அஜீரண கோளாறு மற்றும் மலசிக்கில் ஏற்படும். இதற்கு எப்படி தீர்வு காண்பது ?
- புதினா டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது செரிமான அமைப்பை சீராக்கி உப்புசம் பிரச்சனையை தீர்க்கும். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் புதினா டீ குடிக்கவும்.
- உடலில் வாயு அதிகம் தேங்கினாலும் வயிறு உப்புசம் ஏற்படும். எனவே வாயு உருவாக்கத்தை தவிர்க்க இஞ்சி சாறு குடியுங்கள்.
- பெருஞ்சீரகம் விதைகளை மென்று சாப்பிடுவது அல்லது பெருஞ்சீரக டீ குடிப்பது செரிமான மண்டலத்தில் உள்ள தசைகளை தளர்த்தும் மற்றும் வயிறு உப்புசத்தை குறைக்கும்.
- வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது செரிமானத்தை தூண்டி வயிறு உப்புசத்தை குறைக்கும்.
- இவை அனைத்தையும் விட காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடியுங்கள். ஹார்மோன்கள் சீராக செயல்பட்டு உடலில் நீர் தேக்கம் ஏற்படாது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation