herzindagi
earthen pot water benefits

அடிக்கிற வெயிலுக்கு மண் பானை தண்ணீர் குடிங்க! உடலுக்கு ரொம்ப நல்லது

இன்றைய தலைமுறையினருக்கு மண்பானை தண்ணீரின் அருமை தெரியவில்லை. பிரிட்ஜில் வைத்து குடிக்கும் தண்ணீரை விட மண்பானையில் சேமித்து குடிக்கும் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும்.
Editorial
Updated:- 2024-04-15, 08:41 IST

கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் போது நமக்கு மண்பாண்ட பொருட்களின் நன்மை நினைவுக்கு வரும். குறிப்பாக மண்பானை. பிரிட்ஜில் தண்ணீர் வைத்து குடித்தாலும் மண் பானையில் வைத்து குடிக்கும் தண்ணீரின் சுவை தனித்துவமானது. மண் பானை பயன்பாடு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. கீழடியில் மண்பானை கிடைக்கப்பெற்றுள்ளது. மண் பானை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள், நல்ல மண் பானையை எப்படி வாங்குவது, மண் பானையை எப்படி பழக்குவது உள்ளிட்ட விஷயங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

how to clean clay pots

மண் பானையை வாங்கும் போது அதை கைகளால் தட்டினால் டங் டங் என சத்தம் வரும். ஒட்டை அல்லது விரிசல் இருந்தால் பானையில் சத்தம் கேட்காது. வெளிப்புறத்தில் மட்டுமல்ல உட்புறத்திலும் விரிசல் இருக்கிறதா என பாருங்கள்.

மண் பானை பழக்குதல்

  • புது மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடித்தால் சிலருக்கு சளி பிடிக்கும், அதுமட்டுமின்றி மண்வாசனையும் வரும். இதனால் நாம் பானையை பழக்குவது அவசியம்.
  • அகலமான பிளாஸ்டிக் கிண்ணத்தில் பாதியளவு மண் கொண்டு நிரப்பி அதன் மீது மண்பானை வைத்து சூடான தண்ணீர் நிரப்பவும்.
  • அடுப்பில் பானை வைத்து சூடுபடுத்தக் கூடாது. நன்கு கொதித்த தண்ணீரை பானையில் நிரப்பவும். இதே போல இரண்டு நாட்களுக்கு அடிக்கடி செய்யவும்.
  • இப்படி செய்வதால் பானையில் மண் வாசனை போகும். சூடான தண்ணீர் ஊற்றிய பிறகு கொஞ்சம் நேரத்தில் பானையில் இருந்து வியர்வை துளிகள் போல் வரும். இது வழக்கமானது தான்.
  • இரண்டு நாட்களுக்கு பிறகு பானையை தேங்காய் நார் கொண்டு கழுவவும். பாத்திரம் கழுவும் சோப்பு என எதையும் பயன்படுத்தக் கூடாது.
  • வெறும் தண்ணீரிலேயே பானையை கழுவுங்கள்.

மேலும் படிங்க தொப்பைக் கொழுப்பை குறைப்பதற்கான பயனுள்ள வழிகள்!

மண் பானை தண்ணீர் நன்மைகள்

இயற்கையான குளிர்ச்சி 

மண் பானை தண்ணீர் குடிப்பதன் முக்கிய நன்மைகளில் ஒன்று அதன் இயற்கையான குளிர்ச்சி ஆகும். களிமண் காற்று மற்றும் ஈரப்பதத்தை கடந்து செல்ல அனுமதிக்கிறது. ஒரு மண் பானையில் தண்ணீர் சேமிக்கப்படும் போது தண்ணீர் மெதுவாக துளைகள் வழியாக வெளியேறி மேற்பரப்பில் ஆவியாகிறது. இதனால் நீர் இயற்கையாக குளிர்ச்சியடைகிறது.

அதிகரித்த சுவை 

  • மண் பானையில் தண்ணீர் சேமித்து குடிப்பது குறிப்பிடத்தக்க அளவு தண்ணீரின் சுவையை அதிகரிக்கும். ஒரு மண் பானையில் தண்ணீர் சேமிக்கப்படும் போது அது களிமண்ணில் உள்ள தாதுக்கள் உறிஞ்சி தண்ணீரின் சுவையை அதிகரிக்கிறது.
  • மண் பானைகளில் கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. ஒரு மண் பானையில் தண்ணீர் சேமிக்கப்படும் போது தாதுக்களை உறிஞ்சி நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும். இது மனதையும் உடலையும் குணப்படுத்தும் பூமியின் மின்காந்த பண்புகளையும் கொண்டுள்ளது.
  • அறிவியல் ரீதியாக மண் பானை சுவாசிக்கும். மண் பானை தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் ஏற்படாது.
  • பிரிட்ஜில் வைத்து ஐஸ் தண்ணீர் குடித்து வந்தால் உடல் சூடு அதிகமாகும். அதுவே மண்பானை தண்ணீர் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும்.
Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com