herzindagi
image

சூடான தண்ணீர் குடித்து வந்தால் போதும் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க முடியும்!

தினமும் சூடாகவோ அல்லது வெதுவெதுப்பாக தண்ணீர் குடிக்கும் போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். செல்கள் புத்துணர்ச்சியடைவதோடு பல சரும பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
Editorial
Updated:- 2025-11-18, 20:11 IST

குளிர்காலத்தில் நாம் அதிகம் உபயோகிப்பது சூடான தண்ணீர். குளிப்பது முதல் தாகத்திற்காக தண்ணீர் அருந்துவது முதல் அனைத்தும் சூடான பானமாக தான் இருக்கும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவியாக இருக்கும். இதுவரை உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருப்பது தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் சூடான தண்ணீரைத் தினமும் பருகும் போது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல சருமத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும். வெதுவெதுப்பாக அல்லது சூடாக அருந்தும் போது உடலில் உள்ள நச்சுக்களை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது மட்டுமின்றி சூடான தண்ணீர் எப்படியெல்லாம் சருத்தைப் பராமரிக்கிறது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

சருமத்தைப் பொலிவாக்கும் சூடான தண்ணீர்:

தினமும் சூடான தண்ணீரை அருந்தும் போது சருமத்தை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. சரும வறட்சியைத் தடுத்து முகத்தைப் பொலிவாக்க உதவுகிறது. தினமும் காலை அல்லது மாலையில் சூடான தண்ணீர் குடிக்கும் போது உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சருமத்திற்கும் இரத்த ஓட்டம் சீராக செல்கிறது. இதோடு சருமத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் ப்ரீ ரேடிக்கிள்களைக் குறைத்து சருமத்தை எப்போதும் புத்துணர்சசியோடும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க: ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் கூந்தலை மற்ற இந்த 10 சூப்பர் குறிப்புகளை பயன்படுத்துங்கள்

முகப்பருவைத் தடுக்கும் சுடு தண்ணீர்:

அதிகப்படியான மாசு, எண்ணெய் தன்மை அதிகரித்தல், உணவுப்பழக்க வழக்கம் போன்ற பல மாற்றங்களால் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகப்படியான பருக்கள் ஏற்படுகிறது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக வெதுவெதுப்பான அல்லது சூடான தண்ணீர் அருந்த வேண்டும். இந்த செயல்முறை உடலின் வெப்பநிலையை அதிகரித்து வியர்வையாக வெளியேற உதவுகிறது. எந்தளவிற்கு உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுகிறதோ? அந்தளவிற்கு முகப்பருக்கள், மற்றும் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரிய தொற்றுகளிலிருந்து சருத்தைப் பாதுகாக்கிறது.

முதுமையைத் தடுக்கும் சுடு தண்ணீர்:

வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதால் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க முடியும். நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்களை சருமத்திலிருந்து நீக்குகிறது. சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரித்து முன்கூட்டியே வயதானத் தோற்றத்தைத் தடுக்க உதவுகிறது.

மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் பொலிவை தக்க வைப்பதற்கு செம்பருத்தி பூ எவ்வாறு பயன்படுகிறது என்று தெரியுமா?

ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலை நீரேற்றமாகவும், உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்திருக்க முடியும். உடலின் பல்வேறு பகுதிகளுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்க இரத்த ஓட்டம் மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இது ஒரு இயற்கையான தீர்வாக அமையும் என்பதால் எவ்வித அச்சமும் இன்றி வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கலாம்.

.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com