கடற்கரை சுற்றுலா மற்றும் ஐஸ்கிரீம்களை ரசிக்க கோடைக்காலம் இனிமையானதாக இருந்த நாட்கள் போய்விட்டன. இந்த காலநிலை மாற்றங்கள் மற்றும் அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல் காரணமாக வெப்ப அலைகள் இந்தியாவிற்கு மிகவும் அதிகமாகி கொண்டே இருக்கிறாது. இந்த ஆபத்தான வானிலை உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே கூடுதல் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆயுர்வேதம் என்பது உங்கள் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான அமைப்பை எளிதாக்க செய்ய உதவும் ஒரு இயற்கையான பண்டைய இந்திய மருத்துவ முறையாகும். இதைப் பற்றி மேலும் அறிய ஆயுர்வேதத்தின் ஆயுர்வேத நிபுணர் ஆலோசகர் வைத்யா ஷைஷவ் பாண்டே கூறியுள்ளார். வெப்ப அலைகளின் போது வயிறு மகிழ்ச்சியாக வைத்திருக்க வழிகள்.
குளிரூட்டும் பானங்களை உட்கொள்ளுங்கள்
வெப்ப அலைகளின் போது நல்ல செரிமானத்திற்கு சரியான நீரேற்றத்தை உறுதி செய்ய ஆயுர்வேத படி அலோ வேரா ஜூஸ், கோதுமைப் புல் சாறு மற்றும் கற்றாழை சேர்ந்த ஜூஸ், இஞ்சி மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றால் செய்யப்பட்ட மூலிகை தேநீர் போன்ற குளிர்ச்சியான பானங்களை குடிக்கலாம். இந்த பானங்கள் உடலை குளிர்வித்து வெப்பம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி செரிமான நெருப்பை சீராக வைத்திருக்கும்.
லேசான மற்றும் புதிய உணவுகளை உண்ணுங்கள்
தர்பூசணி, வெள்ளரி மற்றும் திராட்சை போன்ற பழங்கள் உட்பட இலகுவான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். பச்சை இலைக் காய்கறிகள், சுரைக்காய் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் கனமான, எண்ணெய் மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.
கூலிங் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துங்கள்
துளசி , வேம்பு மற்றும் சீரகம் போன்ற மூலிகைகள் குடலை குளிர்விக்கும். இந்த மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி ஒரு புத்துணர்ச்சியூட்டும் மூலிகை தேநீரை உருவாக்கி குடிக்கலாம்.
கவனத்துடன் சாப்பிடுவதைப் பழகுங்கள்
ஆயுர்வேத கூற்றுப்படி விழிப்புணர்வுடன் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உங்கள் உணவை சாப்பிட முயற்சிக்கவும். உங்கள் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. ஜீரண செயல்முறையை சீராக்க நீங்கள் ஆயுர்வேத சூரன்களையும் உட்கொள்ளலாம்.
மென்மையான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்
மேலும் படிக்க: காலையில் யோகா செய்ய முடியாதவர்கள் மாலையில் யோகா செய்வது நல்லதா?
யோகா அல்லது நடைபயிற்சி போன்ற மிதமான உடல் செயல்பாடு அக்னியைத் தூண்டுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும். அதிக வெப்பம் மற்றும் நீரிழப்பைத் தடுக்க கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation