பண்டைய காலம் முதல் நாம் பின்பற்றிய அனைத்து உணவுப்பொருட்களிலும் ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகள் புதைந்துள்ளது. குறிப்பாக வீட்டைக் காக்கும் பெண்களுக்காகவே பிரத்யேக உணவு முறைகள் இருக்கிறது. இதன் காரணமாக தான் அந்தக் காலத்தில் எவ்வித வலியும் இல்லாமல் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகியுள்ளது. அந்த உணவு வேறொன்றும் இல்லை. பெண்களின் உடல் வலிமையையும், எலும்பு ஆரோக்கியத்தையும் காக்கும் கருப்பு உளுந்து கொண்டு செய்யப்படும் கஞ்சி மற்றும் களி தான். இன்றைக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்தங்கஞ்சி செய்யும் முறை மற்றும் அதன் பலன்கள் குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கு வலுசேர்க்கும் கருப்பு உளுந்து கஞ்சி செய்வதற்கு முதலில், கருப்பு உளுந்தை லேசாக வறுத்து ஊற வைக்க வேண்டும். பின்னர் கஞ்சி பதம் வரும் வரை நன்கு வேக வைத்துக்கொண்டு அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் பனை வெல்லம். போன்றவற்றை சேர்த்துக் கொள்ளவும். தற்போது சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்து கஞ்சி ரெடி. இதை சாப்பிடுவதற்கு முன்னதாக சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. உடலுக்கு அதீத வலுசேர்க்கும்
மேலும் படிக்க: குழந்தை பிறந்து 6 மாத காலம் முடிவடைந்துவிட்டதா? இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுத்திடுங்க
ஓரளவிற்கு கட்டிப் பதத்திற்கு வந்தவுடன் பொடியாக்கிய கருப்பட்டி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். சுவைக்காக ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ஏற்படும் இரும்புச்சத்து குறைப்படுகளை போக்க தினசரி செய்ய வேண்டியவை
இறுதியாக குழந்தைகள் விரும்பும் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு நெய்யில் முந்திரி, பாதாம் போன்றவற்றை வறுத்துக் கொட்டினால் போதும். சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த கருப்பு உளுந்து கஞ்சி ரெடி.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com