குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு பிரபலமான இனிப்பு வகை இந்த கேரட் அல்வா. வீட்டிலேயே எளிய முறையில் வெறும் 15 நிமிடங்கள் இருந்தால் போதும் இந்த சுவையான கேரட் அல்வாவை தயாரிக்கலாம். நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்ட சத்துக்களும் இந்த கேரட்டில் நிறைந்துள்ளது. இதனால் கோடை காலத்தில் வெயிலை சமாளிக்க கேரட் வைத்து ஒரு இனிப்பு வகை செய்து வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். அந்த வரிசையில் சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- கேரட் 200 கிராம்
- அரை கப் சர்க்கரை
- அரை கப் பால்
- கால் கப் நெய்
- முந்திரி மற்றும் பிஸ்தா பருப்புகள் தேவையான அளவு
சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி?
முதலில் 200 கிராம் கேரட் துண்டுகளை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளுங்கள். இப்போது இதை தோல் சீவி வைக்கவும். தோல் சீவிய பிறகு இந்த கேரட்டை வெஜிடபிள் ஸ்லைசர் அல்லது வெஜிடபிள் கட்டர் வைத்து பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு இந்த நறுக்கிய கேரட்டில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கிளற வேண்டும். பிறகு ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி துருவிய கேரட்டை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். சுமார் ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை இந்த கேரட்டை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறி விடுங்கள். இப்போது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கேரட் மெதுவாக நிறம் மாற ஆரம்பிக்கும். பிறகு கேரட் நன்றாக வதங்கி வந்ததும் அதன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும். இந்த நேரத்தில் இந்த கேரட் துருவலுடன் அரைக்கப் பால் சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். இதில் பால் சேர்த்த பிறகு கேரட் உடைய நிறம் மஞ்சள் ஆக முழுவதுமாக மாறிவிடும். இந்தப் பால் நன்கு வற்றும் வரை ஆடை வராமல் இருக்க அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
மேலும் படிக்க: உடல் எடையை சட்டுனு குறைக்க சாக்லேட் காபி சியா புட்டிங் ட்ரை பண்ணுங்க!
மேலும் அடிப்பிடிக்காமல் இருக்க அடுப்பை சிம்மில் வைத்து கிளறுங்கள். சிறிது நேரம் பிறகு பால் வற்றிய பின்னர் இதில் அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் சர்க்கரையை அரைத்து பவுடர் பதத்தில் சேர்த்து கிளறி விடுங்கள். இறுதியாக சர்க்கரை சிரப் இந்த கேரட் துருவலுடன் சேர்ந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இதற்குப் பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளற வேண்டும். இப்போது நாம் எடுத்து வைத்த முந்திரி பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை பொடியாக நறுக்கி இந்த கேரட் அல்வாவில் தூவி அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான தித்திக்கும் கேரட் அல்வா ரெடி.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation