நான் வீட்டிலேயே முருங்கை இலைப்பொடியை தயாரிப்பது எப்படி?

முருங்கை இலையிலிருந்து முருங்கை இலைப்பொடி தயாரிக்கும் முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.

make moringa powder at home

தாவர வகையைச் சேர்ந்த முருங்கை இலை பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டிருல் இருந்து வருகிறது. இது கொத்தமல்லி மற்றும் வெந்தயக்கீரை போல சமையலில் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆயுர் வேத மருத்துவத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஒரு தாவரத்தில் பல நன்மைகள் அடங்கியுள்ளன.

இந்த தாவரம் முருங்கை மரம் எனவும் அழைக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அள்ளித்தரும் இந்த முருங்கை இலையின் பண்புகள் பற்றி விரிவாகப் பார்ப்போம் வாருங்கள். இதனுடன் இந்த பதிவில் முருங்கை இலைப்பொடி தயாரிக்கும் முறையையும் கற்றுக்கொள்வோம்.

முருங்கை இலையின் நன்மைகள்

அனைத்து பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் இந்த முருங்கை மரம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் முருங்கை மரத்தைப் பார்க்கலாம். இது மிகவும் உயரமாக வளரக்கூடியது. அதே நேரம் இதை வீட்டு தொட்டியிலும் நட்டு வைக்கலாம். முருங்கை மரத்தில் இருக்கும் முருங்கை இலையில் நம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

முருங்கை இலையை உட்கொள்வது புற்றுநோய் மற்றும் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்லது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நம் எலும்புகளைப் பலப்படுத்த உதவுகின்றன. முருங்கை இலை முடக்குவாதத்திற்கு நல்லது. இதுனுடன் பல நன்மைகள் முருங்கை இலையில் கொட்டி கிடக்கின்றன. எனவே இதை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: ஹோட்டல் ஸ்டைலில் சுவையான, ஊட்டச்சத்துமிக்க காளான் பூண்டு கறி செய்வது எப்படி?

முருங்கை இலைப்பொடி தயார் செய்வது எப்படி?

how to make moringa powder

மற்ற பொடிகளைத் தயார் செய்வது போலவே முருங்கை இலைப்பொடி தயார் செய்வதும் மிக மிக சுலபம். முருங்கை இலையிலிருந்து முருங்கை இலைப்பொடி தயாரிக்கும் முறை பின்வருமாறு.

  • முதலில் முருங்கை இலைகளைக் காம்பிலிருந்து உருவி கொள்ளவும்.
  • பின்பு இலைகளை 2 முதல் 3 முறைவரை தண்ணீரில் நன்கு அலசவும்.
  • இப்போது இந்த இலைகளைக் கூடையில் கொட்டி அதை துணி அல்லது கைக்குட்டையால் மூடி உலர விடவும்.

இந்த பதிவும் உதவலாம்: சத்தான சுவைமிக்க ஆப்பிள் பாயாசம் செய்வது எப்படி?

  • நேரடியாக சூரிய ஒளியில் வைத்து உலர வைக்கக் கூடாது. நிறம் மாறி அதன் சத்துக்கள் குறைந்து விடும். சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்தால் போதும்.
  • இல்லையெனில் ஃபேன் காற்றுக்கு கீழே வைத்துக் கூட உலர விடலாம்.
  • முருங்கை இலைகள் நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் போட்டுப் பொடியாக்கி கொள்ளவும்.
  • இப்போது அதை காற்று புகாத பாட்டிலில் போட்டு சேமித்து வைத்து தினமும் பயன்படுத்தலாம்.

வீட்டிலேயே எளிமையாக முருங்கை இலைப்பொடி தயாரிக்கும் முறை நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP