ரம்யா பாண்டியன் 2015 ஆம் ஆண்டு வெளியான டம்மி பட்டாசு என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து ஜோக்கர் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.ஆனால் இந்த படத்திற்கு பிறகு ரம்யா பாண்டியன் எதிர்பார்த்த பிரபலம் கிடைக்கவில்லை. ரம்யா பாண்டியன் ஒரு போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டார். இந்த போட்டோ ஷூட்டால் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார். அதன் பின்பு பட வாய்ப்புகளும் குவிந்தன.
விஜய் டிவியின் டாப் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு 3-வது ரன்னர் அப்பாக வெற்றிப்பெற்றார். பிக்பாஸ் அல்டிமேட்டிலும் ரம்யா பாண்டியன் கலந்துக்கொண்டார்.மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்தபடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் இருக்கிறது.தற்போது இடும்பன்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த பதிவும் உதவலாம் :நடிகை நயன்தாராவின் கிளாமர் போட்டோ ஷூட்!
போட்டோ ஷூட்!
நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்வார். தற்போது லேட்டஸ்டாக கிளாமராக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட மாடர்ன் உடையை அணிந்திருக்கிறார். உடைக்கு ஏற்றமாதிரி மேக்கப் செய்திருக்கிறார். கண்கள் பார்த்தவுடன் அழகாக தெரிய வேண்டும் என போல்ட் மேக்கப்பையே செய்திருக்கிறார். கழுத்தை ஒட்டி சோக்கர் அணிந்திருப்பது கூடுதல் அழகை சேர்க்கிறது. ரம்யா பாண்டியனின் இந்த படங்கள் வைரலாகி வருகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation