துல்கர் சலமான் நடிப்பில் தமிழ்,தெலுங்கில் வெளியான சீதா ராமம் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடித்திருந்தார். மிருணாள் தாகூர் இதற்கு முன்பு ஹிந்தியில் பல சீரியல்கள் மற்றும் படங்களிலும் நடித்துள்ளார். எந்த திரைப்படமும் அவருக்கு பெற்றுதராத வரவேற்பை சீதா ராமம் பெற்று தந்தது.
சீதா ராமம் படத்திற்கு பிறகு மிருணாள் தாகூர் பான் இந்தியா ரசிகர்களை பெற்றார். தற்போது விஜய் தேவரகொண்டா மற்றும் நானி நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் நானியுடன் இணைந்து ’ஹாய் நானா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மிருணாள் தாகூர் பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.இன்ஸ்டாகிராமில் பல பிராண்ட்களுக்கு விளம்பர ப்ரமோஷன்களையும் செய்து வருகிறார்.
இந்த பதிவும் உதவலாம் :சினிமாவில் பல கஷ்டங்களை எதிர்கொண்டேன் - நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை மிருணாள் தாகூர் மாடர்ன் லுக்கில் லேட்டஸ்டாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கருப்பு நிற ஸ்ட்ராப் லெஸ் பாடி கான் உடையை அணிந்திருக்கிறார். மேக்கப்பை பொறுத்தவரை நியூட் மேக்கப் செய்திருக்கிறார். கர்லி ஹேர் ஸ்டைலில் ரசிக்க வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸை குவித்து வருகிறது.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation