ரகுல் ப்ரீத் சிங் தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான தடையற தாக்க என்ற படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு என்னமோ ஏதோ என்ற படத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்தார். இந்த படங்கள் மூலம் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை.2017 ஆம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் மூலம் தமிழில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் ரகுல் ப்ரீத் சிங். சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தில் நடித்துள்ளார். இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் சினிமாவில் முன்னேற நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டதாக கூறியுள்ளார். ‘’சிறிய வயதிலிருந்தே சினிமாவுக்கு வர வேண்டும் என கனவு கண்டுள்ளேன். சினிமா பற்றி ஒன்றுமே தெரியாது. மாடலிங் செய்த நான் அங்கிருந்து மிஸ் இந்தியா சென்றேன் அதிலிருந்து சினிமாவுக்கு வந்தேன். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டுவிட்டு தனிமையில் மும்பையில் வாழ்ந்து வந்தேன்.
பல ஆடிஷனுக்காக வரிசையில் நிற்பேன்.வாய்ப்புகளுக்காக காஸ்டிங் ஏஜெண்ட், டைரக்டர்களுக்கு தொடர்ந்து கால் செய்வேன். சில படங்களில் கையெழுத்து போட்ட பிறகு கடைசி நேரத்தில் என்னை மாற்றிவிட்டு வேறொருவரை நடிக்க வைப்பார்கள். இப்படி நிறைய அனுபவங்களை பார்த்தேன். கடைசியாக சினிமாவில் அடியெடுத்து வைத்து தற்போது உங்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டேன்.
இந்த பதிவும் உதவலாம் :லைக்ஸை அள்ளும் சமந்தாவின் லேட்டஸ்ட் போஸ்ட்!
என்னுடைய இந்த பயணத்தில் எல்லா பிரச்சனைகளும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்தது. கடுமையான உழைப்பினால் லட்சியத்தை அடைந்தேன். மேலும் என்னுடைய குடும்பம் துணையாக இல்லாவிட்டால் இந்த நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது’’எனக் கூறியுள்ளார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation