image

மன அமைதி முதல் நேர்மறை ஆற்றல் வரை; சந்தனம் தரும் ஆன்மிக பலன்கள் என்னென்ன?

ஆன்மிகத்தில் சந்தனத்தின் அற்புத பலன்கள் குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். குறிப்பாக, மன அமைதி முதல் நேர்மறை ஆற்றல் வரை பல்வேறு விதமான நன்மைகளை சந்தனம் அளிக்கிறது என்று நம்பப்படுகிறது.
Editorial
Updated:- 2025-09-30, 13:09 IST

சந்தனம் என்பது ஆன்மிகத்தின் ஒரு அங்கம் என்று நம் அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் பல்வேறு வகையான பலன்கள் நமக்கு கிடைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Kantha Sashti Viratham 2025: 48 நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கும் நேரம்; விரத நாளில் முருகனை வழிபடும் முறைகள்

 

மேலும், இந்திய பாரம்பரியங்களில் சந்தனம் ஒரு புனிதமான இடத்தை பெறுகிறது. சடங்கு ரீதியான வழிபாடுகளில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இது தூய்மை, ஆன்மிக தொடர்பு மற்றும் பக்தியின் சின்னமாக தெய்வங்களின் மீதும், பக்தர்களின் நெற்றியிலும் பூசப்படுகிறது. இதற்கான காரணங்கள் மற்றும் சந்தனத்தின் நன்மைகளை இதில் காண்போம்.

 

தூய்மையின் சின்னமாக கருதப்படும் சந்தனம்:

 

பக்தர்களுக்கு சந்தனம் பூசப்படும்போது, அது தூய்மை, பக்தி மற்றும் தெய்வீகத்திடம் சரணாகதி அடைவதை குறிக்கிறது. இது சந்தனம் பூசிக் கொள்பவரை, உயர்ந்த ஆன்மிக இலட்சியங்களுடன் இணைக்கும் ஒரு மரியாதையின் அடையாளமாகும். நெற்றியில் சந்தனத்தை பூசிக் கொள்வது, பக்தர்கள் தங்கள் மனம் மற்றும் இதயத்தின் தூய்மைக்கு அளித்த அர்ப்பணிப்பை நினைவூட்டுகிறது. இது அவர்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. மேலும், ஆன்மிக ஒழுக்கம் மற்றும் பணிவு உணர்வை ஊக்குவிக்கிறது.

Sandalwood benefits

 

புனிதமான காணிக்கை:

 

கடவுளுக்கு வழங்கப்படும் தூய்மையான காணிக்கைகளில் ஒன்றாக சந்தனம் கருதப்படுகிறது. அதன் இயற்கையான நறுமணம் மற்றும் புத்துணர்ச்சி, பக்தி மற்றும் மரியாதையை வெளிப்படுத்துகின்றன. தெய்வங்களுக்கு சந்தனம் பூசுவது என்பது, களங்கமற்ற மற்றும் தெய்வீகமான காணிக்கையுடன் அவர்களை வழிபடும் செயலாகும். சந்தனம், தூய்மை மற்றும் நேர்மறை ஆற்றலை வெளியிடுவதால், இது வழிபாட்டிற்கும், தெய்வீக சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது.

மேலும் படிக்க: மஹாளய அமாவாசை எப்போது? திதி கொடுக்க உகந்த நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்!

 

ஆன்மிகத்தின் குறியீடு:

 

சந்தனம் என்பது பக்தர்களுக்கு சாந்தியையும், புனிதத்தன்மையையும் கொண்டு வரும் ஓர் ஆசீர்வாதமாக கருதப்படுகிறது. இது மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்தை போக்கவும், தீய சக்திகளிலிருந்து காக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது. சந்தனத்தை பூசும்போது, அது வலுவான ஆன்மிக பிணைப்பை ஏற்படுத்தி, பிரார்த்தனையின் அமைதியான தன்மையை அன்றாட வாழ்வில் பயன்படுத்த பக்தர்களை வழிநடத்துகிறது.

Sandalwood uses

 

சந்தனத்தின் தன்மை:

 

தெய்வங்களின் திருமேனியில் சந்தனம் பூசப்படும்போது, அது அவர்களின் ஆற்றலை அமைதிப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது. அதன் அமைதியான குணம், பக்தர்களுக்குள்ளும் அமைதி, சாந்தம் மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வருகிறது. கோயில்கள் மற்றும் வீடுகளில் இது அமைதியான சூழ்நிலையை பராமரிக்க உதவுகிறது. இதனால், அங்கு வரும் பக்தர்களின் ஆன்மிக தொடர்பு மிகவும் தெய்வீகமாகவும், தூய்மையாகவும் மாறுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com

;