image

Ayudha Puja 2025: ஆயுத பூஜையின் முக்கியத்துவம் மற்றும் உங்கள் பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் இதோ!

Ayudha Puja 2025: ஆயுத பூஜையின் முக்கியத்துவம் குறித்து இந்தக் கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம். மேலும், ஆயுத பூஜையின் வழிபாட்டு முறை குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-10-01, 10:48 IST

Ayudha Puja 2025: நவராத்திரி விழாவின் போது கொண்டாடப்படும் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்று ஆயுத பூஜை. குறிப்பாக, தென்னிந்தியாவில் இது மிகவும் பிரபலம் ஆகும்.

மேலும் படிக்க: Saraswati Pooja 2025: சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்? வழிபாட்டு முறைகள் இங்கே!

 

இந்த பண்டிகை, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கருவிகள், உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இது போர் கருவிகளை கௌரவிப்பதற்காக தோன்றியது என்றாலும், காலப்போக்கில் இது மாற்றம் அடைந்து, மக்கள் தங்கள் வாகனங்கள், புத்தகங்கள் மற்றும் வீட்டிலுள்ள பொருட்களையும் வணங்கும் ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது.

 

ஆயுத பூஜையின் முக்கியத்துவம்:

 

இதனை சாஸ்திர பூஜை அல்லது அஸ்திர பூஜை என்றும் அழைக்கின்றனர். இதன் பொருள் ஆயுதங்களை வணங்குதல் என்பதாகும். பண்டைய காலத்தில், போர் வீரர்கள் போருக்குச் செல்வதற்கு முன் தங்கள் ஆயுதங்களுக்கு பூஜை செய்தனர். நவீன காலத்தில், இந்த பாரம்பரியம் விரிவடைந்து, மக்கள் தங்கள் வேலைகளில் உதவும் அனைத்தையும் உள்ளடக்கியதாக மாறியது.

Saraswati Pooja

 

உதாரணமாக, கைவினைக் கலைஞர்கள் தங்கள் கருவிகளை வணங்குகிறார்கள். மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தங்கள் புத்தகங்களுக்கு பூஜை செய்கிறார்கள். பலர் தங்கள் வாகனங்களுக்கு பூஜை செய்யும் வழக்கத்தை கடைபிடிக்கின்றனர். தங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் இந்த பொருட்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவற்றை வணங்குவதாக நம்பப்படுகிறது.

மேலும் படிக்க: Kantha Sashti Viratham 2025: 48 நாள் கந்த சஷ்டி விரதம் தொடங்கும் நேரம்; விரத நாளில் முருகனை வழிபடும் முறைகள்

 

ஆயுத பூஜையின் பின்னணி கதை:

 

இந்த பண்டிகையின் பின்னணி, துர்கா தேவிக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே நடந்த போரின் கதையில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, மகிஷாசுரனுடன் சண்டையிட, தேவர்கள் துர்கைக்கு பலவிதமான ஆயுதங்களை வழங்கினர். ஒன்பது நாட்கள் நடந்த கடுமையான போருக்கு பிறகு, நவமிக்கு முந்தைய நாளில் துர்கா தேவி மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்றார்.

Ayutha puja 2025

 

அந்த வெற்றியை அடைய துர்கைக்கு உதவிய தெய்வீக சக்திகளுக்கும், கருவிகளுக்கும் மரியாதை செலுத்தும் ஒரு பாரம்பரியமாக, இந்தப் புனித நாளில் கருவிகளையும், ஆயுதங்களையும் வணங்குவது வழக்கமானது.

 

ஆயுத பூஜையின் சடங்குகளும், வழக்கங்களும்:

 

ஆயுத பூஜை என்பது வீடுகளிலும், பணியிடங்களிலும் செய்யப்படும் சிறப்பான சடங்குகளால் நிறைந்தது. மக்கள் தங்கள் வீடுகள், வாகனங்கள் மற்றும் கருவிகளை முழுமையாக சுத்தம் செய்வதில் இருந்து பூஜையை தொடங்குகிறார்கள்.

 

வணங்கப்பட வேண்டிய பொருட்கள் அனைத்தும் சந்தனம், மஞ்சள், குங்குமம், பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படுகின்றன. கார், இருசக்கர வாகனம் போன்றவை மா இலைகள், வாழை மரக்கன்றுகள் மற்றும் குங்கும பொட்டுடன் அலங்கரிக்கப்படுகின்றன. புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் ஆகியவையும் பெருமளவு வணங்கப்படுகிறது.

 

இதன் மூலம் ஆயுத பூஜையின் முக்கியத்துவம் மற்றும் அதன் வழிபாட்டு முறைகளை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com

;