நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் அறிமுகமானார்.அந்த சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.அதையடுத்து சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக மக்களின் மனதை கவர்ந்துவிட்டார். 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை மீனாட்சியாக நடித்து வந்தார். சின்னத்திரை பிரபலம் ரியோவுடன் இணைந்து சரவணன் மீனாட்சி சீசன் மூன்றிலும் மீனாட்சியாக நடித்தார். இந்த சீரியல் 2016 ஆம் முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.
சரவணன் மீனாட்சி சீரியலுக்கு பிறகு நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் ரச்சிதா நடிக்கவில்லை.
விஜய் டிவியில் டாப் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 -இல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ரச்சிதா 91 வது நாள் எலிமினேட் ஆனார்.அதன் பின்பு பிக்பாஸ் கொண்டாட்டம் மற்றும் ஓ சொல்றியா ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
இந்த பதிவும் உதவலாம் :சின்னத்திரை பிரபலம் மணிமேகலைக்கு என்னாச்சு? அவரே சொன்ன சோகக்கதை..
நடிகை ரச்சிதா மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார். விதவிதமாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். தற்போது ட்ரெடிஷ்னல் லுக்கில் போட்டோ செய்து பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் காட்டன் புடவையை கட்டி ரசிக்க வைத்திருக்கிறார். எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் சிம்பிளாம லுக்கில் அழகாக இருக்கிறார். அணிகலன்களை பொறுத்தவரை காதில் பெரிய கோல்டன் ஜிமிக்கி மட்டும் போட்டுள்ளார். சன்செட் நேரத்தில் இந்த போட்டோ ஷூட்டை செய்திருக்கிறார். ரச்சிதா மகாலட்சுமியின் இந்த புகைப்படத்திற்கு பல ஆயிரம் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது,
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation