நம் இந்தியாவில் கோவில்கள் ஹிந்து கலாச்சாரத்தின் வெளிப்பாடாக பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கின்றது. ஏதாவது ஒரு நல்ல விஷயம் நடந்தால் உடனே கோவிலுக்கு சென்று தேங்காய் உடைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறோம் என்று யோசித்து பார்த்தது உண்டா? குறிப்பாக பெண்கள் கோவிலில் தேங்காய் உடைக்கக்கூடாது என்று கூறுவார்கள். அதிலும் கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கவே கூடாது. பெண்கள் கோவிலில் ஏன் தேங்காய் உடைக்க கூடாது என்றும் இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆன்மிகம் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
இந்திய வரலாற்றையும், கோவில்களையும் பிரிக்க முடியாது. கோவில்கள் இந்திய சமூகத்தின் அடையாளமாக விளங்குகின்றன. பல நூற்றாண்டுகள் கடந்தும் கோவில்கள் அழியாமல் இருப்பது போலவே, அங்கு நடைபெறும் சில சடங்குகளும் இன்றும் தொடர்கின்றன. அவற்றில் ஒன்று தான் தேங்காய் உடைப்பது. எந்த நல்ல காரியத்தைத் தொடங்கும் முன்பும், குறிப்பாக பிள்ளையார் கோவில்களில், தேங்காய் உடைக்கும் பழக்கம் மக்களுக்கு உள்ளது. ஆனால் வேதங்களின்படி, பெண்கள் தேங்காய் உடைப்பது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் தேங்காய் இல்லாத சடங்குகளைக் காண்பது மிகவும் அரிது. சுபகாரியங்களாக இருந்தாலும், துக்க நிகழ்வுகளாக இருந்தாலும், தேங்காய் இடம்பெறாமல் இருக்காது. கோவில்களில் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் முக்கியமான பொருளாக தேங்காய் விளங்குகிறது. பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மனிதனால் அழிக்கப்படாத, கலப்படமில்லாத இயற்கைப் பொருளாக தேங்காய் இருப்பதால், கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
அனைத்து மங்கல காரியங்களுக்கும் முதலில் வணங்கப்படும் கடவுள் விநாயகர். தேங்காய் அவருக்கு மிகவும் பிடித்தமான படையல்களில் ஒன்று. இதனால்தான் புதிய வாகனம் வாங்கினாலோ, புது வீட்டிற்கு நுழையும்போதோ, முதலில் தேங்காய் உடைக்கப்படுகிறது.
தேங்காய் உடைப்பது நம் கர்வத்தை அழிப்பதன் சின்னமாகக் கருதப்படுகிறது. தேங்காய் மனித உடலைக் குறிக்கிறது. அதைக் கடவுளின் முன்னால் உடைப்பது, நமது அகங்காரத்தை அழித்து, ஆன்மாவைப் பரம்பொருளுடன் இணைப்பதாகக் கருதப்படுகிறது. இதில் இவ்வளவு முக்கியத்துவம் இருந்தும், பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது என்பது சாஸ்திரங்களின் விதி. வீட்டின் லட்சுமி என்றால் அது பெண் தான். எனவே, அவர்கள் தேங்காய் உடைப்பது, அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது குடும்பத்தில் லட்சுமி தேவியின் கோபத்தை ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.
அதே போல கோவிலில் தேங்காய் உடைப்பது ஒருவகை பலியாகக் கருதப்படுகிறது. இத்தகைய செயல்களை பெண்கள் செய்வது குடும்பத்திற்கு நல்லதல்ல. தேங்காய் ஒரு விதை போன்றது. அதை உடைப்பது வாழ்க்கையை முடிப்பது போன்றது. இதைப் பெண்கள் செய்வது பாவமாகக் கருதப்படுகிறது. இது அவர்களின் குழந்தை பாக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வேதங்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: எப்போதும் சண்டை போடும் ராசிகள் யார்? இவர்களுக்கு பொருத்தமே இருக்காது
கோவிலில் தேங்காய் உடைக்கக்கூடாது என்ற இந்த விதி குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு பொருந்தும். கர்ப்பத்தில் வளரும் குழந்தை ஒரு விதை போன்றது. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைப்பது அவர்களின் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது.
தேங்காய் உடைப்பது இந்திய கோவில் சடங்குகளில் முக்கிய இடம் வகிக்கிறது. ஆனால், சாஸ்திரங்களின்படி பெண்கள் இந்த செயலைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆன்மிகம் கூறுகிறது.
Image source: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com