டிபன் சாம்பார், ஹோட்டல் சாம்பார், மாங்காய் சாம்பார், காய்கறி சாம்பார் என 15க்கும் அதிகமான சாம்பார் வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சுவை உண்டு. இதில் அரைச்சுவிட்ட சாம்பார் அற்புதமாக இருக்கும். எப்போதாவது அரைச்சுவிட்ட சாம்பார் ருசித்திருப்போம். அதில் கொஞ்சமாக நெய் ஊற்றி சாப்பிட்ட சுவையை மறிந்திருக்க வாய்ப்பில்லை. பருப்பின் தரம், தேங்காய் துருவல், மசாலா பேஸ்ட் இவை அரைச்சுவிட்ட சாம்பாரின் ருசியை உயர்த்தி கொடுக்கும். தயாரித்த அரை மணி நேரத்தில் அரைச்சுவிட்ட சாம்பார் சாப்பிடுவது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கும். வாருங்கள் அரைச்சுவிட்ட சாம்பார் செய்முறையை பார்க்கலாம்.
அரைச்சுவிட்ட சாம்பார் செய்ய தேவையானவை
- துவரம் பருப்பு
- பாசிப் பருப்பு
- காய்கறிகள்
- சின்ன வெங்காயம்
- வெங்காயம்
- தக்காளி
- தேங்காய் துருவல்
- காய்ந்த மிளகாய்
- முழு தனியா
- கடலை பருப்பு
- உளுத்தம் பருப்பு
- வெந்தயம்
- சீரகம்
- கடுகு
- புளி
- பெருங்காயம்
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- கொத்தமல்லி
- நல்லெண்ணெய்
- நெய்
மேலும் படிங்கசிப்பி காளான் குழம்பு : அட அட அசைவ உணவுகளே தோற்றிடும் சுவையில்
அரைச்சுவிட்ட சாம்பார் செய்முறை
- கடாயில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், அரை டீஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு குறைந்த தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வறுத்தெடுக்கவும்.
- அடுப்பின் சூட்டிலேயே கால் கப் தேங்காய் துருவல் சேர்த்து கலந்துவிடுங்கள். இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரை டம்ளர் முதல் முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் பக்குவத்திற்கு அரைக்கவும்.
- இப்போது கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் போட்டு தாளிக்கவும்.
- இதன் பிறகு இரண்டு காய்ந்த மிளகாய், 15 சின்ன வெங்காயம், ஒரு பெரிய வெங்காயத்தை நான்காக நறுக்கி போட்டு வதக்க ஆரம்பிக்கவும்.
- வெங்காயம் ஓரளவு வதங்கியவுடன் இரண்டு தக்காளியை எட்டாக நறுக்கி சேர்க்கவும். தக்காளி வதங்கி பச்சை வாடை போனவுடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள் போட்டு கலந்துவிடுங்கள்.
- ஒரு கொதி வந்த பிறகு 250 கிராம் அளவிற்கு மொத்தமாக அவரைக்காய், மாங்காய், கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் சேர்த்து தீயை கொஞ்சம் அதிகப்படுத்தி தண்ணீர் தெளித்து வேக விடவும்.
- அரைத்த மசாலா அனைத்தையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் காத்திருங்கள். அதன் பிறகு 50 மில்லி புளி தண்ணீர் போடுங்கள்.
- மீண்டும் இரண்டு நிமிடம் கழித்து நன்றாக வெந்து மசிந்த 100 கிராம் துவரம் பருப்பு, 25 கிராம் பாசிப் பருப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடிவிட்டு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.
சுவையான அருமையான அரைச்சுவிட்ட சாம்பார் ரெடி.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation