குழந்தை பிறந்த பிறகு உடலுறவில் ஈடுபடுவது எப்போது ? நெருக்கத்தை அதிகரிப்பது எப்படி ?

பொதுவாக குழந்தை பிரசவித்த பிறகு தம்பதிகளிடையே நெருக்கம் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கும். குழந்தை பிறந்த சில வாரங்களுக்கு உடலுறவு போன்ற விஷயங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் மீண்டும் நெருக்கம் காட்ட விரும்பினால் மனதில் சிலவற்றை நினைவில் கொள்ளுங்கள்.
image

குழந்தை பிறந்த பிறகு தம்பதிகளிடையே பல மாற்றங்களை காண முடியும். குறிப்பாக குழந்தை பிரசவித்த பெண்ணிடம் உடல் ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். அந்த மாற்றங்கள் மனநலனிலும் உடல்நலனிலும் பிரதிபலிக்கும். அதே நேரம் குழந்தையை கவனிக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பும் சுமக்க நேரிடும். இவை அனைத்தும் தம்பதி இடையிலான நெருக்கத்திலும் தாக்கத்தை உண்டாக்கும். குழந்தை பிறந்த பிறகு கணவன் மனைவி இடையிலான நெருக்கம் காணாமல் போயிருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.

sex after childbirth

மகப்பேறுக்கு பிந்தைய உடலுறவு

  • குழந்தை பிரசவித்த பிறகு தம்பதி இடையே நெருக்கமும் உடலுறவு ரீதியான விஷயமும் சுமூகமான முறையில் தொடர்வது அவசியமாகும். இதற்கு தம்பதி இடையே அமைதியும், உரையாடலும், புரிதலும் தேவைப்படுகிறது.
  • குழந்தை பிறகு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் தம்பதியின் நெருக்கத்தில் நேரடி தொடர்புடையது. எனினும் இதை ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ முடியும். இந்த புதிய மாற்றத்தை உரையாடல் மூலம் ஏற்கலாம்.
  • முதலில் குழந்தை பிரசவித்த பெண்ணின் உடலில் காயங்கள் ஆறுவதற்கு நேரம் ஆகும். உடலுறவு விஷயத்தை குறைந்தது 6 வாரங்களுக்கு தள்ளிப் போட வேண்டும். பிரசவத்தின் போது உடல் அனுபவித்த வலியில் இருந்து அப்பெண் மீள்வது அவசியம். பிறப்பு உறுப்பில் வலி, உடலில் போட்ட தையல் மீதும் கவனம் தேவை. இந்த நேரத்தில் அவசரம் காட்ட கூடாது.
  • குழந்தை பெற்றெடுத்த பிறகு தூங்குவதில் சிரமம் இருக்கும். இது ஒரு புதிய பொறுப்பு ஆகும். குழந்தையை கவனிப்பதிலும் உணர்வு ரீதியான பாதிப்பு ஏற்படும். எனவே இந்த நேரத்தில் இருவருக்கு இடையில் அதிகப்படியான புரிதல் தேவை. நீங்கள் இருவரும் உணர்வு ரீதியாகவும் நெருக்கத்தை விரும்ப வேண்டும். இதில் பெண்ணை விட ஆணின் புரிதல் அதிகம் தேவைப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு இருவருக்கும் தனியாக நேரம் தேவைப்படும்.
  • இருவரும் கட்டிப்பிடிப்பது, கை கோர்த்து நடப்பது போன்ற விஷயங்கள் குழந்தை பிறந்த பிறகு நெருக்கத்தை அதிகரிக்க உதவும். உடலுறவு செய்வதற்கான வாய்ப்பை இவை ஏற்படுத்தி கொடுக்கும்.
  • ஒருவருக்கு ஒருவர் பேசி புரிதலை அதிகரித்து கொள்ளுங்கள். உங்களிடம் குழந்தை இருந்தாலும் உங்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கவும்.
  • அதே போல பிரசவித்த பெண்ணை கவனித்து கொள்வது ஆணின் கட்டாயமாகும்.
  • மேலும் ஒருவருக்கு ஒருவர் இந்த விஷயத்தில் அவசரம் காட்டக் கூடாது. உங்களுக்கு இடையில் தானாக தோன்றும் வரை காத்திருக்கவும்.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP