விவசாய தொழிலில் உழவனுக்கு ஏர் கலப்பை சுமக்கும் தோழனாகவும், ஜல்லிக்கட்டு களத்தில் சீறிப்பாயும் காளையாகவும், வாழ்க்கை முழுவதும் மனிதனுக்கு பால் கொடுக்கும் பசுவாகவும் மாடுகள் நமது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றன. போர் தொடுக்கும் காலங்களில் கூட ஒரு நாட்டின் வளத்தை சுரண்ட அந்நாட்டில் உள்ள மாடுகளையே முதலில் வசப்படுத்துவார்கள் என வரலாறு உண்டு. இப்படி காலங்காலமாக மனிதனுக்கு உதவி வரும் மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலன்று பகிர வேண்டிய சில வாழ்த்து செய்திகள்
மேலும் படிங்க Kaanum Pongal 2024 : காணும் பொங்கலன்று எங்கு செல்லலாம் ?
இதே போல மனிதர்களின் வாழ்க்கையில் மாடுகளின் முக்கியத்துவம் குறித்து பல பாடல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற வந்தேன் டா பால்காரன் பாடல் மாட்டுப் பொங்கல் கொண்டாடும் ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் கட்டாயம் ஒலிக்கும் அல்லது மாட்டு பொங்கல் ஸ்டேட்டஸ் வைப்போரின் வீடியோவில் கட்டாயம் இந்தப் பாடல் இருக்கும். அதில் இடம்பெற்ற சில வரிகள்
“புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்”
“தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாக பிரிப்பது பசுவோட வேலையப்பா”
“சானம் விழுந்தா உரம் பாரு... எருவை எரிச்சா திருநீறு”
மாடு வைத்திருக்கும் உங்களின் அனைத்து தோழர்களுக்கும் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி மகிழுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com