herzindagi
image

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அவசியமான ஒன்று. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க என்னென்ன உணவுகள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
Editorial
Updated:- 2025-10-02, 23:48 IST


குழந்தையை எவ்வித பாதிப்பும் இல்லாமல் பெற்றெடுப்பது தாய்மார்களுக்கு எத்தனையோ சவால் நிறைந்ததாக இருக்குமோ? அது போன்று தான் பிறந்த குழந்தைகளைக் கவனத்துடன் கையாள்வது. ஆம் குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு கட்டாயம் தாய்ப்பாலைத் தவிர வேறு எதுவும் தரக்கூடாது என மருத்துவர்கள் அறிவுரை கூறுவார்கள். ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறி விட்டது.

இளம் தாய்மார்களில் பலருக்கு தாய்ப்பால் சுரப்பு என்பதில்லை. கருவுற்ற காலத்தில் ஊட்டச்சத்துள்ள உணவுகள் சாப்பிடாதது முதல் மன அழுத்தம் போன்ற காரணங்களால் தாய்ப்பால் சுரப்பு இருக்காது. இதன் காரணமாக மருத்துவர்கள் இக்காலத்து தாய்மார்களுக்குத் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சில மாத்திரைகளை வழங்குவார்கள். இதெல்லாம் தற்காலிக தீர்வாக அமையும். குழந்தைகளுக்கு எவ்வித தடையும் இன்றி தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்றால் உணவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

மேலும் படிக்க:   தாய்ப்பால் கட்டிக்கொண்டால் இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க, உடனே வலி குறையும்

  • பொதுவாக குழந்தை பிறந்த முதல் 6 மாதங்களுக்கு தாய்மார்களுக்கு கூடுதலாக புரதம் மற்றும் கலோரிகள் தேவை. இச்சத்துக்கள் முறையாக தாய்ப்பாலின் வழியாக கிடைக்கும் போது குழந்தைகள் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். எனவே தினமும் முட்டை, பால், பருப்பு வகைகள், மீன், மட்டன் மற்றும் நாட்டுக் கோழி போன்றவற்றைச் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 2 லிருந்து 3 லிட்டர் வரை கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • அடுத்ததாக உணவு முறையில் வெந்தயத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு இதில் உள்ள ஒமோகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.


மேலும் படிக்க: “செல்போன் தான் வேணும்; இல்லை சாப்பிட மாட்டேன்” - அடம்பிடிக்கும் குழந்தைகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்

  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் கட்டாயம் உணவு முறையில் கீரை வகைகளைச் சேர்க்க வேண்டும். முருங்கை கீரை, சிறு கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு கீரையைத் தினமும் சேர்க்க வேண்டும். இதில் உள்ள கால்சியம், நார்ச்சத்துக்கள் போன்றவை குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குப் பேருதவியாக உள்ளது.
  • குழந்தைப் பெற்ற தாய்மார்கள் கட்டாயம் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிடலாம். இல்லை தினமும் காலையில் பாலுடன் பூண்டு சேர்த்து காய்ச்சிக் குடிக்கவும். கருப்பட்டி சேர்த்து பருகும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
  •  அடுத்ததாக பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சம்பழம், அத்திப்பழம் போன்ற நட்ஸ் வகைகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். இவை பால் சுரப்பை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவக்கூடும்.

Image Credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com