எவ்வித சத்தமும் இல்லாமல் பெண்களைப் பாதிக்கும உயிர்கொல்லி நோய்களில் ஒன்றாக உள்ளது மார்பக புற்றுநோய். ஆரம்ப கட்டத்தில் எதுவும் தெரியவில்லையென்றாலும், மார்பு பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், முலைக்காம்பில் வீக்கம் மற்றும் வலி, மார்பகங்களில் திடீர் வீக்கம் மற்றும் வலி போன்ற அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறியவில்லையென்றால் மார்பக புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து உயிரைக் கூட கொல்லும். இதற்காக நீங்கள் மருத்துவமனைக்குச் சென்று தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. பெண்கள் வீட்டிலேயே சில பரிசோதனைகளை மேற்கொண்டு மார்பக புற்றுநோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். இதோ என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: அதிகம் உப்பு உள்ள உணவுகளை சாப்பிடுகிறீர்களா? அதன் விளைவுகளை பாருங்கள்!
பொதுவாக மாதவிடாய் சமயத்தில் பெண்களுக்கு மார்பகங்களில் இறுக்கமும், வலியும் ஏற்படும். இந்த வலி தொடர்ச்சியாக அதிகரித்து வந்தால் புற்றுநோயின் அறிகுறிகளாக எடுத்துக் கொண்டு மருத்துவ பரிசோதனை நல்லது. இதோடு மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடல் சோர்வு, பசியின்மை, குமட்டல், எடை இழப்பு போன்ற பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். எனவே இதுபோன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
இதுபோன்ற அறிகுறிகள் மற்றும் மார்பகத்தில் வலி ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை நலலது. குறிப்பாக பெண்கள் 30 வயதைக் கடந்து விட்டாலே மோமோகிராபி என்ற மார்பக புற்றுநோய் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image souece - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com