குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை ஆஸ்துமா. ஆஸ்துமாவின் ஆரம்பகால அறிகுறிகளை கவனத்தில் கொண்டால், இந்த நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். சுவாசிக்கும் போது சிரமம் ஏற்படுதல், தூங்கும் போது மூச்சு திணறல், எளிதாக மூச்சுவிட முடியாத நிலை போன்றவை ஆஸ்துமாவின் முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்த நிலை "பிராங்கியல் ஆஸ்துமா" என்று அழைக்கப்படுகிறது. ஆஸ்துமா ஒரு நாள்பட்ட நோயாக இருந்தாலும், சரியான பராமரிப்பு மற்றும் கவனிப்புடன் இதனை கட்டுப்பாட்டில் வைத்து இயல்பான வாழ்க்கை நடத்த முடியும். அந்த வரிசையில் இந்த ஆஸ்துமா பிரச்சனையை கட்டுப்படுத்த தேன் மற்றும் கலோஞ்சியை எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இன்றுவரை ஆஸ்துமாவின் துல்லியமான காரணம் அறிவியல் உலகால் கண்டறியப்படவில்லை. எனினும், பல காரணிகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது: மரபணு காரணிகள், பல்வேறு ஒவ்வாமை நிலைகள், சுற்றுச்சூழல் மாசு, உணவு ஒவ்வாமை, தூசி மற்றும் பூச்சிகள், வாசனை திரவியங்கள் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
மூச்சுவிடுவதில் கடினம், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடும் போது சீழ்க்கை சத்தம், தொடர்ச்சியான இருமல் மற்றும் இரவு நேரத்தில் அறிகுறிகள் அதிகரிப்பது. துரதிர்ஷ்டவசமாக, ஆஸ்துமாவை முழுமையாக குணப்படுத்த முடியாது. இதற்கு காரணம், இதன் துல்லியமான காரணம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பதே. எனினும், சரியான மேலாண்மை மூலம் இதன் அறிகுறிகளை கணிசமாக குறைக்க முடியும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com