
தமிழகத்தைப் பொறுத்தவரை மார்கழி, தை, மாசி மாதங்களில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். உடல் நல பாதிப்புகள் ஏற்படுவது ஒருபுறம் இருந்தாலும் குளிர்ந்த காற்றால் காது வலி பிரச்சனையையும் மக்கள் அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. குழந்தைகள் மற்றும் 40 வயதிற்கு மேலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு அதிகளவில் குளிர்ந்த காற்றால் காதுவலி ஏற்படுகிறது. குளிர்ந்த காற்றால் ஏன் காதுவலி ஏற்படுகிறது? இதற்கு என்னென்ன எளிய வைத்திய முறைகளை மேற்கொள்ள வேண்டும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
குளிர்ந்த காற்றால் காதுவலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது யூஸ்டேஷியன் எனப்படும் குழாய். இது தான் நமது மூக்கையும் காதையும் இணைக்கிறது. குளிர்காலத்தில் அதிகளவிலான காற்று மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் போது, வறண்ட காற்றின் காரணமாக இந்த குழாய் மூடிக்கொள்கிறது. காற்று செல்ல முடியுமால் மூடிக்கொள்வதால் காது சவ்வுகள் இழுக்கப்பட்டு வல அதிகமாக ஏற்படுகிறது. இதோடு மட்டுமின்றி உடலின் மற்ற பாகங்களில் இருப்பதைப் போன்று வெளிப்புற காதுகளில் கொழுப்பு கிடையாது. குளிர்ந்த காற்று செல்லும் போது காதுகளில் வலி ஏற்படுகிறது. அதிகளவில் சளி, தொண்டை கரகரப்பு, சைனஸ் தொற்று பாதிப்புகள் இருக்கும் போது காதுவலி அதிகளவில் ஏற்படுகிறது.
மேலும் படிக்க: மூளைக்கு வேலை கொடுங்க; ஞாபக சக்தி மற்றும் கவனத்தை அதிகரிக்கும் 5 சூப்பர் வழிகள்!
மேலும் படிக்க: Winter diet: குளிர்காலத்தின் போது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com