உயர் இரத்த சர்க்கரையை ஹைபர் கிளைசீமியா என்றும் அழைக்கிறார்கள். இது சர்க்கரை நோய் மற்றும் சர்க்கரை நோயின் முந்தைய நிலையுடன் தொடர்புடையது. சர்க்கரை நோய் என்று வகைப்படுத்தும் அளவுக்கு அதிகமாக இல்லாத இரத்த சர்க்கரை அளவை ப்ரீடியாபயாட்டீஸ் என்று அழைக்கிறார்கள். நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இவை தொடர்ந்து அதிகமாக தொடரும் பொழுது உறுப்புகள் உடல் நலத்திற்கு பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: குறைவாக சாப்பிட்டாலும் தொப்பை மட்டும் குறையவில்லையா? இந்த பானத்தை ட்ரை பண்ணுங்க!
15 நாட்களில் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதற்கு உதவக்கூடிய சில குறிப்புகளை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ஐந்து வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த முறையை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு முயற்சி செய்துள்ளார், அதில் 96 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நேர்மறையான விளைவுகளை கண்டுள்ளனர். ஆகையால் பின்வரும் 5 குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் 15 நாட்களில் உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
சர்க்கரை நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்தில் உள்ளவர்கள் பின்வரும் 5 விஷயங்களை தவிர்க்க வேண்டும்
குறிப்பு 1
- உடல் செயல்பாடுகள் அற்ற உட்கார்ந்த வாழ்க்கை முறையை தவிர்க்கவும். 40 நிமிட தீவிர உடற்பயிற்சி(நடைபயிற்சி/சைக்கிள் ஓட்டுதல்/கார்டியோ/யோகா) மற்றும் 20 நிமிட சுவாச பயிற்சி(பிராணாயாமம்) செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
- சர்க்கரை நோயை தடுப்பதற்கும், கட்டுக்குள் வைத்திருக்கவும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
- சுறுசுறுப்பாக இருப்பதால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும் இதனுடன் உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்ஸிஜன் விநியோகம் சிறப்பாக இருக்கும். இது கல்லீரலை சுத்தம் செய்து இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தும்.
குறிப்பு 2
- வெள்ளை சர்க்கரை மைதா, தயிர் மற்றும் குளூட்டன் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
- காய்கறி மற்றும் பழங்களில் கிடைக்கக்கூடிய இயற்கை சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம்.
- பசும் பால் மற்றும் நெய்யை குறைந்த அளவுகளில் எடுத்துக் கொள்ளலாம்.
- ராகி, கம்பு போன்ற சிறுதானியங்களையும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு 3
- இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடவும்.
- இரவில் சீக்கிரம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதுடன் இருதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.
- மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது நல்லது. இதை பின்பற்ற கடினமாக இருந்தால் இரவு உணவை 8 மணிக்கு எடுத்துக் கொள்ள முயற்சி செய்யவும்.
குறிப்பு 4
- உணவு சாப்பிட்ட உடனே தூங்குவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. குறிப்பாக அதிகப்படியான இரத்த சர்க்கரை உள்ளவர்கள் இரவு உணவிற்குப் பிறகு உடனே தூங்க கூடாது.
- மேலும் காலை நேரத்தில் தூங்குவதால் உடலின் கபதோஷம் அதிகரிக்கலாம். இதனால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். எனவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்கவும்.
- இரவு உணவு சாப்பிட்ட 2-3 மணி நேரங்கள் கழித்து தூங்குவது நல்லது.
குறிப்பு 5
- ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றி சர்க்கரை நோய்க்கான மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்வது சரியல்ல. இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இளம் வயதிலேயே பாதிப்படையலாம்.
- இதனால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 எளிய உணவுகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation